Aathangarai Orathile Yarumilla

Aathangarai Orathile Yarumilla Song Lyrics In English


இசை அமைப்பாளர் : கே வி மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆத்தங்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே காத்தாட வந்த போது வள்ளியம்மா உன்னைக் கண்ணாரக் கண்டேனே வள்ளியம்மா உன்னைக் கண்ணாரக் கண்டேனே வள்ளியம்மா

ஆத்தங்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே காத்தாட வந்த போது வள்ளியம்மா உன்னைக் கண்ணாரக் கண்டேனே வள்ளியம்மா உன்னைக் கண்ணாரக் கண்டேனே வள்ளியம்மா

அன்னம் வந்து உதிப்பதற்கு முன்னே நீ உதித்தாயோ ஆடும் மயில் பிறந்தபோது கூடவே பிறந்தாயோ

என்ன செய்தும் திரும்பாமல் மண் பார்த்து நடப்பவளே என்ன செய்தும் திரும்பாமல் மண் பார்த்து நடப்பவளே வண்ண மலர் வாய் திறந்து எண்ணுவதை கூறாயோ


ஆத்தங்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே காத்தாட வந்த போது வள்ளியம்மா உன்னைக் கண்ணாரக் கண்டேனே வள்ளியம்மா உன்னைக் கண்ணாரக் கண்டேனே வள்ளியம்மா

முதல் நாள் வெறும் பார்வை அடுத்த நாளில் சில வார்த்தை மறுநாள் சிறு உதவி வாழ்நாளில் தொடராதோ

நில்லாத கால்களினால் நிலத்தை அளப்பவளே நில்லாத கால்களினால் நிலத்தை அளப்பவளே நீ போகும் திசையினிலே நினைவெல்லாம் போகின்றதே

ஆத்தங்கரை ஓரத்திலே யாருமில்லா நேரத்திலே காத்தாட வந்த போது வள்ளியம்மா உன்னைக் கண்ணாரக் கண்டேனே வள்ளியம்மா உன்னைக் கண்ணாரக் கண்டேனே வள்ளியம்மா

ஆத்தங்கரை ஓரத்திலே