Aayiram Vaanavil |
---|
ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்
நானே நானா
ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்
நானே நானா
புது மழையா புது வெயிலா
நானே நானா
புது மலரா புது நிறமா
நானே நானா
இனி கவலை எப்போதும் இல்லை
புது சிறகு ஆகாயம் எல்லை
தினம் தினமே சந்தோசம்தானே
புது விடியல் என் தேசம்தானே
வானம்பாடி நான்
புதுமை பெண்ணே நான்
வானம்பாடி நான்
புதுமை பெண்ணே நான்
ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்
நானே நானா
ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்
நானே நானா
நானே தேடும் முகம்
நானே பாடும் சுகம்
நானே காணும் நனவு
வானம் பூமி இனி
எந்தன் தோழி என
நாளும் சேர்ந்து வருவேன்
கால் தடம் கால் தடமாய்
ஆஆஅஆஅஆஅஹாஆஆஆ
நான் எனை நான் எனை தொடர்வேனே
போதும் போதும் இனி
எந்தன் வாழ்வு தனி
சந்தோசங்கள் கோடி
ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்
நானே நானா
ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்
நானே நானா
நானே எந்தன் குடை
நானே தந்த வரம்
நானே சொந்த வெளிச்சம்
இல்லை வேறு சிறை
சொல்வேன் நூறு முறை
நானே செய்யும் உலகம்
புன்னகை சிறகாலே
நான் இனி நான் இனி பறப்பேனே
இன்னும் என்ன சொல்ல
நாளை உண்டு வெல்ல
வாழும் வாழக்கை எனக்கே
ஆயிரம் வானவில் ஆயிரம் தோரணம்
நானே நானா
ஆயிரம் ஆடலும் ஆயிரம் பாடலும்
நானே நானா
புது மழையா புது வெயிலா
நானே நானா
புது மலரா புது நிறமா
நானே நானா
இனி கவலை எப்போதும் இல்லை
புது சிறகு ஆகாயம் எல்லை
தினம் தினமே சந்தோசம்தானே
புது விடியல் என் தேசம்தானே
வானம்பாடி நான்
புதுமை பெண்ணே நான்
வானம்பாடி நான்
புதுமை பெண்ணே நான்