Anbe Enadhu Ragam |
---|
பாடலாசிரியர் : புலமைபித்தன்
அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம் அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்
என் காவிய நாயகன் என்னுயிர் கண்ணனை பாடும் கவிதை பாடும் என் கண்களும் நெஞ்சமும் நீ வரும் பாதையில் தேடும்
அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்
ஆஆஆஆஆஆஆஆஆஆ கனவொன்றில் உன்னைக் காண துயில் கொள்ள நான் போனேன் ஆஹாஹ் ஆஆஆஆஆஹாஹ் துயில் மட்டும் வரவேயில்லை எங்கும் உன்னை நான் பார்த்தேன் ஆஹாஹ் ஆஆஆஆஆஹாஹ்
நிலா வீசும் நேரத்தில் வைகை ஆற்றின் ஓரத்தில் நிலா வீசும் நேரத்தில் வைகை ஆற்றின் ஓரத்தில் இள மணல் தேடி இருவரும் கூடி கவிதைகள் கோடி நாம் பாட இருவர் : ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம் அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்
அதோ அந்த வானம் சாட்சி உன்னால்தானே வாழ்கின்றேன் ஆஹாஹ் ஆஆஆஆஆஹாஹ் உண்ணும் போதும் உறங்கும்போதும் உன்னைத்தானே காண்கின்றேன் ஆஹாஹ் ஆஆஆஆஆஹாஹ்
கங்கை காய்ந்து போகாது மங்கை காதல் மாறாது கங்கை காய்ந்து போகாது மங்கை காதல் மாறாது இலக்கியம் பாடும் புலவர்கள் நம்மை எழுதிடும் காலம் வாராதோ இருவர் : ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம் அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்
என் காவிய நாயகன் என்னுயிர் கண்ணனை பாடும் கவிதை பாடும் என் கண்களும் நெஞ்சமும் நீ வரும் பாதையில் தேடும்
அன்பே எனது ராகம் அதுதான் இதய தாகம்