Ivargal Indiyargal |
---|
இவர்கள் இந்தியர்கள் இவர்கள் இந்தியர்கள் இந்திய மண்ணின் பண்புக்கும் அன்புக்கும் இலக்கணமாக இருப்பவர்கள் நல்ல இலக்கியமாக நிலைப்பவர்கள் இருவர் : இவர்கள் இந்தியர்கள்
தன் மகனாயினும் தவறுகள் புரிந்தால் நன் மகன் அல்ல என நினைத்தார் இந்த நல்லவன் பிள்ளையின் உயிர் பறித்தார் வாய்க்கு ருசியாய் ஊட்டிய கையால் வாய்க்கரிசி அள்ளிப் போட்டுவிட்டார் வாய்க்கு ருசியாய் ஊட்டிய கையால் வாய்க்கரிசி அள்ளிப் போட்டுவிட்டார்
பாரினில் தர்மம் வாழ்ந்திட வேண்டி பாசத்தை மண்ணில் புதைத்துவிட்டார் இருவர் : இவர்கள் இந்தியர்கள் இவர்கள் இந்தியர்கள்
நன்றி மறந்தவன் நடைப்பிணமென்று இங்கொரு தந்தை விதி செய்தார் மகன் இருந்தும் அவனுக்கு திதி செய்தார்
விளக்கின் அடியில் இருட்டிருந்தாலும் வெளிச்சம் கொடுக்கும் அனைவருக்கும் விளக்கின் அடியில் இருட்டிருந்தாலும் வெளிச்சம் கொடுக்கும் அனைவருக்கும்
அடுத்தவர் கண்ணீர் துடைப்பவர் வாழ்வும் அதுபோல் இங்கே அமைந்திருக்கும் இருவர் : இவர்கள் இந்தியர்கள் இவர்கள் இந்தியர்கள்
கூட்டுக் குடும்பத்தின் பாரத்தை எல்லாம் ஏற்றுக் கொண்டான் இந்த சுமைதாங்கி அதை இமை போல் காத்தான் துயில் நீங்கி
தன் கைப் பற்றி தாலி அணிந்த நங்கையை கூட தொடவில்லை தன் கைப் பற்றி தாலி அணிந்த நங்கையை கூட தொடவில்லை
நாயகன் போலே நாயகி அமைந்தாள் பூமியில் இவர்க்கோர் இணையில்லை
இவர்கள் இந்தியர்கள் இவர்கள் இந்தியர்கள் இந்திய மண்ணின் பண்புக்கும் அன்புக்கும் இலக்கணமாக இருப்பவர்கள் நல்ல இலக்கியமாக நிலைப்பவர்கள் இருவர் : இவர்கள் இந்தியர்கள் இவர்கள் இந்தியர்கள்