Kaalamellam Adi Female

Kaalamellam Adi Female Song Lyrics In English


காலமெல்லாம் அடி காலமெல்லாம் இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு கண்மணியே ஏன் சோகங்கள் உன் கண்ணோடு கண்ணோடு கண்ணோடு

ஆணவம் போலொரு சுமையில்லை அன்பினை போலொரு அழகில்லை பாசமும் நேசமும் அறியாமல் வாழ்வதில் துளியும் சுகமில்லை

கண்ணில் கொஞ்சம் அன்பை வைத்தால் சுற்றி சுற்றி பூஞ்சோலை அன்புக் கைகள் தொட்டுப் பார்த்தால் பாலை கூட நீரோடை

காலமெல்லாம் அடி காலமெல்லாம் இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு

பூக்களின் அழகு ஒரு தினமே பூவையின் அழகு சில தினமே அழியாத அழகு அன்பினிலே

கூந்தலின் அழகு உதிரும் வரை கோபுர அழகு இடியும் வரை அன்புக்கு அழகு இறுதி வரை உன் மனம் உன்னையே தூரமாய் வைத்ததே அது உனக்கின்று உறவானதா

சங்கீதமும் சந்தோஷமும் அன்புக் கொண்ட வாழ்வில் உண்டு கண்டுபிடி பொன் மானே அன்புக் கொண்ட நெஞ்சம் போதும் ஏழை கூட சீமானே

காலமெல்லாம் அடி காலமெல்லாம் இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு


வெய்யில் வரும் முன்னே குடைப் பிடித்தான் வேர்த்திடும் முன்னே விசிறி விட்டான் உறங்காமல் கண்ணும் சிவந்து விட்டான்

உனக்கென தன்னை கொடுத்து விட்டான் சுடு மொழி சொன்னாய் பொறுத்து விட்டான் தாயாகி உன்னை ஜெயித்து விட்டான்

பாரடி பைங்கிளி காதலின் சந்நிதி அதில் ஒரு தெய்வம் இவனல்லவா உனக்காகவே இவன் வாழ்கிறான் எதற்காக உந்தன் வாழ்க்கை நீ சொல்லடி தனித்தனி வாழ்வின் அர்த்தம் கிடையாதடி

காலமெல்லாம் அடி காலமெல்லாம் இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு கண்மணியே ஏன் சோகங்கள் உன் கண்ணோடு கண்ணோடு கண்ணோடு

ஆணவம் போலொரு சுமையில்லை அன்பினை போலொரு அழகில்லை பாசமும் நேசமும் அறியாமல் வாழ்வதில் துளியும் சுகமில்லை

கண்ணில் கொஞ்சம் அன்பை வைத்தால் சுற்றி சுற்றி பூஞ்சோலை அன்புக் கைகள் தொட்டுப் பார்த்தால் பாலை கூட நீரோடை

காலமெல்லாம் அடி காலமெல்லாம் இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு