Kadal Vazhum Meenai |
---|
பாடலாசிரியர் கண்ணதாசன்
கடல் வாழும் மீனை குடி நீரில் போட்டால் காற்றில்லாமல் மாண்டு போகும் அதுதானே உண்மை தரம் கேட்டு வாழ்வில் குணம் கெட்ட பெண்ணை தாரமாகக் கொண்டு வந்தால் அதில் எது மேன்மை
கடல் வாழும் மீனை குடி நீரில் போட்டால் காற்றில்லாமல் மாண்டு போகும் அதுதானே உண்மை
ஆங்கார ஆண்மை நோயாளியானால் ஆடு கூடப் பாயாதோ அதுதானே பூமி யார் யாரோ வந்தார் யார் யாரோ போனார் பேதை போல நான் வாழப் படைத்தானே சாமி
கடல் வாழும் மீனை குடி நீரில் போட்டால் காற்றில்லாமல் மாண்டு போகும் அதுதானே உண்மை
மழைக்காலம் பாதி வெயில் காலம் பாதி மானமின்றி போனாலோ எல்லாமே நீதி அழைக்காமல் போனால் அநியாய தெய்வம் ஆடுகின்றேன் நான் இங்கு உயிர்தானே மீதி
கடல் வாழும் மீனை குடி நீரில் போட்டால் காற்றில்லாமல் மாண்டு போகும் அதுதானே உண்மை தரம் கேட்டு வாழ்வில் குணம் கெட்ட பெண்ணை தாரமாகக் கொண்டு வந்தால் அதில் எது மேன்மை
கடல் வாழும் மீனை குடி நீரில் போட்டால் காற்றில்லாமல் மாண்டு போகும் அதுதானே உண்மை