Kadavule |
|---|
கடவுளே கடவுளே
நீ குழந்தையை
வரமென தருகிறாய்
அணுவிலே அணுவிலே
நீ அதிசய கவிதையை
வரைகிறாய்
நீதானே மகளே
நீதானே எனதுயிர்
நான் செய்த தவமே நீயோ
கல்லுக்குள் ஈரம்போல்
உள்ளுக்குள் ஊறுமே
தந்தை பாசம்
வெளியில் தெரியா வேரோஓ
ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
உன்னாலே உன்னாலே
ஒரு கோடி ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
உன்னாலே உன்னாலே
ஒரு கோடி ஆனந்தம்
கடவுளே கடவுளே
நீ குழந்தையை
வரமென தருகிறாய்
நீ வாழும் உலகங்கள்
புரிகின்றதே
நான்தானே அது என்று
தெரிகின்றதே
அப்பா உன் அருகினில் இருக்கின்ற போதே
என் நெஞ்சம் ஊற்றாய் கசிகின்றதே
உன் மொழிகளிலே
நீ கருணையை சுமக்கிறாய்
என் நிழலுக்குமே
நீ குடையினை பிடிக்கிறாய்
உன்னை மகளாய் தந்தாயே
எந்தன் நகலாய் வந்தாயே
கூடாதோ என் ஆயுள் கூடாதோ
சேயோ சேயோ இல்லை தாயோ தாயோ
வேற் ஓர் ஜென்மம்தான் வேண்டுமோ
போதும் போதும்
எனகிதுதான் போதும்
போதும் போதும்
எனகிதுதான் போதும்
ஆனந்தம் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம்
உன்னாலே உன்னாலே
ஒரு கோடி ஆனந்தம்
பேரன்பில் எனதுயிர்
திளைக்கும் என்றே
நான் அன்று பிறந்ததும்
நினைத்தது உண்டோ
பூமிக்கு வருகிற உயிர்களுக்கு எல்லாம்
உன் போல தந்தை கிடைப்பது உண்டோ
நீ உறக்கம் இன்றி
என் நினைவினில் நிரம்புவாய்
நீ உறக்கத்திலும்
என் பெயரினில் எழும்புவாய்
தோள்கள் உண்டு கண்மூடு
தொட்டில் என்றே கொண்டாடு
எந்நாளும் நீ வேண்டும் என்னோடு
கண்ணே கண்ணே
எந்தன் பெண்ணே பெண்ணே
இறப்பினும் பிறப்பேன் உன் பிள்ளையாய்
போதும் போதும்
எனகிதுதான் போதும்
போதும் போதும்
எனகிதுதான் போதும்
