Kannan Oru

Kannan Oru Song Lyrics In English


கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ

கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை

உன் மடியில் நான் உறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ

உன் மடியில் நான் உறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ

ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா

அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன் அருகில் நானிருந்தால்
ஆனந்தத்தின் எல்லை அது

காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும்வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா

மஞ்சள் கொண்டு நீராடி
மொய் குழலில் பூ சூடி

வஞ்சி மகள் வரும் போது
ஆசை வரும் ஒரு கோடி


மஞ்சள் கொண்டு நீராடி
மொய் குழலில் பூ சூடி

வஞ்சி மகள் வரும் போது
ஆசை வரும் ஒரு கோடி

கட்டழகன் கண்களுக்கு
மை எடுத்து எழுதட்டுமா
கண்கள் பாட கூடும் என்று
பொட்டு ஒன்று வைக்கட்டுமா

கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை

கன்னம் சிந்தும் தேன் அமுதை
கொண்டு செல்லும் என் மனதை

கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ

மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ
ஆராரிரோ
ஆராரிரோ
ஆராரிரோ
ஆராரிரோ

இருவர் : ஆராரிரோ