Maalai Karukkalil Sad

Maalai Karukkalil Sad Song Lyrics In English


ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ
சோடிக் குயிலொண்ணு
பாடிப் பறந்ததத்தான் தேடுதோ
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
என் ஜீவனே

மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ
சோடிக் குயிலொண்ணு
பாடிப் பறந்ததத்தான் தேடுதோ

ஒன்னோட கண்ணுக்குள் கண்ண வச்சு
ஒலகத்த கண்டு கொண்டேன்
ஒன்னோட நெஞ்சுக்குள் நெஞ்ச வச்சு
ஒறவொண்ணு கொண்டு வந்தேன்
நீ சிரிச்சா பூ உதிரும்
நீ அணைச்சா தேன் சிதறும்
செவ்வந்திப் பூவுக்கு சோகம் என்ன
சிங்காரக் கண்ணுக்குள் மேகம் என்ன
நீ சொல்லடி

மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ
சோடிக் குயிலொண்ணு
பாடிப் பறந்ததத்தான் தேடுதோ
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
என் ஜீவனே


மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ

மரணத்தில் இல்லாத துன்பம் உந்தன்
கண்ணீரில் வந்ததம்மா
உறவுன்னு நீ சொன்ன சொல்ல நம்பி
உயிரொண்ணு வாழுதம்மா
நீ அழவோ பொன் மணியே
நீர் விழவோ கண் வழியே
கண்ணே நீ வாடாத நந்தவனம்
கண்ணீரத் தாங்காது இந்த மனம்
வா தேவியே

மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ
சோடிக் குயிலொண்ணு
பாடிப் பறந்ததத்தான் தேடுதோ
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
கண்ணுக்குள்ளே வா வா
நெஞ்சுக்குள்ளே போ போ
என் ஜீவனே

மாலைக் கருக்கலில்
சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ
சோடிக் குயிலொண்ணு
பாடிப் பறந்ததத்தான் தேடுதோ