Nambikkai Vaidhuvidu |
---|
நம்பிக்கை வைத்துவிடு நம்பிக்கை வைத்துவிடு நம்பிக்கை வைத்துவிடு தெய்வநாயகி கைக் கொடுப்பாள் நல்ல நாள் வரும் கண் திறப்பாள்
அம்பிகை என்பவள் அன்னையடி நீ அவள் மடியாடும் பிள்ளையடி அம்பிகை என்பவள் அன்னையடி நீ அவள் மடியாடும் பிள்ளையடி
நம்பிக்கை வைத்துவிடு தெய்வநாயகி கைக் கொடுப்பாள் நல்ல நாள் வரும் கண் திறப்பாள் நல்ல நாள் வரும் கண் திறப்பாள்
சொக்கப் பொன் தீ வைத்து சுட்டாலும் என்னாகும் சோபிக்கும் மேன்மேலும் சோதிக்கும் நேரத்தில் பாதிக்கும் நெஞ்சங்கள் சாதிக்கும் எந்நாளும்
இன்று நட்ட விதை நாளை நல்ல மரமாகி ஆயிரம் பூப் பூக்கும் செய்யும் தியாகங்களும் நியாய தீபங்களும் செல்லும் பாதைக்கு கைக் காட்டும் கண்ணுக்குள் எழும் ஈரம் மெல்லத்தானே தீரும்
இரவுகள் யாவும் விடிந்து விடும் இரவுகள் யாவும் விடிந்து விடும் கெட்ட கனவுகள் யாவும் கலைந்துவிடும் கெட்ட கனவுகள் யாவும் கலைந்துவிடும்
நம்பிக்கை வைத்துவிடு தெய்வநாயகி கைக் கொடுப்பாள் நல்ல நாள் வரும் கண் திறப்பாள் நல்ல நாள் வரும் கண் திறப்பாள்
தெய்வத்தின் மேலுந்தன் பாரத்தை போடம்மா சோகங்கள் தூளாகும் கல்லுக்குள் வாழ்கின்ற தேரைக்கும் சோறிட்டு காப்பவள் தாயாகும்
காலம் கூடும் வரை காயம் ஆறும் வரை கொஞ்சம் தாங்கிடு பெண் மானே இன்று ஆட்டி வைப்பாள் பின்பு சேர்த்தணைப்பாள் அந்த தாயுமோர் பெண்தானே அம்மம்மா எதிர்காலம் எண்ணம் போலேயாகும்
முடிவுகள் யாவும் தாய் வசம்தான்ஆ முடிவுகள் யாவும் தாய் வசம்தான் செய்யும் முயற்சிகள் மாத்திரம் நம் வசம்தான் செய்யும் முயற்சிகள் மாத்திரம் நம் வசம்தான்
நம்பிக்கை வைத்துவிடு தெய்வநாயகி கைக் கொடுப்பாள் நல்ல நாள் வரும் கண் திறப்பாள் நல்ல நாள் வரும் கண் திறப்பாள்