Oongara Rubathil Uruvanavan |
---|
என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத் தன்னை நினையத் தருகின்றான் புன்னை விரசுமகிழ் சோலை வியன்நாரை யூர்முக்கண் அரசு மகிழ் அத்தி முகத்தான் வியன்நாரை யூர்முக்கண் அரசுமகிழ் அத்தி முகத்தான்
ஓங்கார ரூபத்தில் உருவானவன் அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன் ஓங்கார ரூபத்தில் உருவானவன் அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்
நீங்காத ஞானத்தை தருவான் அவன் தன்னை பொல்லாப் பிள்ளை எனினும் வருவான் அவன் நீங்காத ஞானத்தை தருவான் அவன் தன்னை பொல்லாப் பிள்ளை எனினும் வருவான் அவன்
ஓங்கார ரூபத்தில் உருவானவன் அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்
பால கணபதி தன்னை சீலம் அருளுக என்று நாம் போற்ற வழிக் காட்டுவான் வீர கணபதி முன்பு யாரும் வணங்கிட வந்து ரட்சித்து கணை தீட்டுவான்
தருண கணபதி இன்று வருக விரைவுடன் என்று ஓர் சொல்லில் ஒளிக் கூட்டுவான் துவாஜ கணபதி இங்கு மடமை விலகிட வந்து நூல் தந்து புகழ் சூட்டுவான்
ஐந்து கரமாட ஆனை முகமாட அருள் தரும் கரி முகனே நாவற்பழம் கொண்டு மோதகம் ஏந்தி நலன் தரும் சிவன் மகனே முழு முதலே பரம் பொருளே தமிழ் தரும் அமுதே
ஓங்கார ரூபத்தில் உருவானவன் அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்
சக்தி கணபதி செல்வ லட்சுமி கணபதி ஞான க்ஷிப்ர கணபதியும் நீயே பக்த கணபதி வெல்லும் விக்ன கணபதி நெடிய புவன கணபதியும் நீயே
உச்சிட்ட கணபதி சிங்க கணபதி ஊர்த்துவ கணபதியும் நீயே மஹா கணபதி எங்கள் ஹேரம்ப கணபதி நிருத்த கணபதியும் நீயே
ஓங்கார ரூபத்தில் உருவானவன் அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன் நீங்காத ஞானத்தை தருவான் அவன் தன்னை பொல்லாப் பிள்ளை எனினும் வருவான் அவன்
ஓங்கார ரூபத்தில் உருவானவன் அந்த ஓசைக்குள் வேதத்தின் பொருளானவன்