Paavakadai Theruvil |
---|
பாவக்கடைத் தெருவில்
படுத்திருந்த பாவியென்னை
ஞானக் கடல் தன்னில்
நடக்கவிட்ட வேல்முருகன்
ஆறுபடை நாயகனே
அவமதிக்கும் மானிடர்க்கு
மாறுதலைக் காட்டி மனம்
திருந்தும் வேல் முருகா
சத்தியத் திருக்கோலம்
முத்தையன் வடிவென்ற
தத்துவம் அறிந்தேன் கந்தா
சத்தியத் திருக்கோலம்
முத்தையன் வடிவென்ற
தத்துவம் அறிந்தேன் கந்தா
பித்தனின் விளையாட்டுப்
பிழை பொறுத்தே உந்தன்
பேரருள் தந்தாய் கந்தா
கை சுமந்தாலென்ன
தலை சுமந்தாலென்ன
கந்தனைச் சுமக்கின்றது
அவன் கடன் தந்த என் மேனி
காலத்திலே வந்து
கடனையும் தீர்க்கின்றது
கடனையும் தீர்க்கின்றது
முருகா
சத்தியத் திருக்கோலம்
முத்தையன் வடிவென்ற
தத்துவம் அறிந்தேன் கந்தா
தத்துவம் அறிந்தேன் கந்தா
மாதுமையாள் மைந்தன்
மாசிமகம் காண
மானிடம் திரள்கின்றது
மாதுமையாள் மைந்தன்
மாசிமகம் காண
மானிடம் திரள்கின்றது
இந்த மக்களின் வினை என்னும்
சிக்கலைத் தீர்க்கும் கரம்
சிக்கலில் இருக்கின்றது
கரம் சிக்கலில் இருக்கின்றது
அழகப்பன் மேனிக்கு
அழகு செய்தால் அதில்
அருள் நெறி ஜொலிக்கின்றது
திரு ஆண்டியப்பன் காலில்
ஆசிகள் பெறவேண்டி
அரசாங்கம் வருகின்றது
வெந்தணல் போல் எழுந்த
விதியினில் துடிப்போர்க்குச்
சந்தனம் தருகின்றது
நல்ல வீட்டுக் குலமகளை
விளக்கேற்றி வைக்கச் சொல்லி
குங்குமம் இடுகின்றது
மங்கல குங்குமம் இடுகின்றது
அவனிடம் போனவர்க்கு
அவனை அடைதவர்க்கு
எமனிடம் பயமில்லையே
அந்த சிவனிடம் ஓம் என்றால்
இவனிடம் பொருள் கேட்டான்
இவனுக்கு மேலில்லையே
இருவர் : உண்டான ஆயுதங்கள்
ஒன்பது எதிர்த்தாலும்
தண்டாயுதம் காக்குமே
அவனைக் கொண்டாடும் பேருகளுக்கு
குறையாவும் ஓடிவிடும்
கோடானு கோடி வருமே
கோடானு கோடி வருமே