Potraamarai |
---|
பொற்றாமரை
பற்றும் என
சுற்றும் புனல்
காணும் நொடி
கற்றை கொடி
செற்றம் உற
குற்றம் சில
ஆற்றும் நொடி
எரியும் தழல் விட்டு
சிறகுகள் விரிப்பவள்
கருகும் சிறகோடு
வானத்தில் பறப்பவள்
பொற்றாமரை
பற்றும் என
சுற்றும் புனல்
காணும் நொடி
கற்றை கொடி
செற்றம் உற
குற்றம் சில
ஆற்றும் நொடி
உதிர்க்க முடியாத
வலி இவள் இதயத்தில்
அசைக்க முடியாத
உரம் இவள் மனதினில்
பொற்றாமரை
பற்றும் என
சுற்றும் புனல்
காணும் நொடி
கற்றை கொடி
செற்றம் உற
குற்றம் சில
ஆற்றும் நொடி
ரா ராரா ராரா ரா
ரு ருரு
காட்டிலே ஓர் பூவா
யார் இவள்
தீயிலே ஓர் காடா
யார் இவள்
காதலும் செய்வாளே
கண்களும் கொய்வாளே
காதலா நீ இமைக்கையிலே
தென்றலாய் செல்வாளே
நின்றுதான் கொல்வாளே
பாதகா நீ சிரிக்கையிலே
மெய் யாதெனின்
பொய்யின் நிழல்
காணும் வரை
வாழ்வே சுழல்
யாவும் பிழை
தூளாய் தடை
தானே படை
இரத்தம் விடை
புதிர்கள் ஒவ்வொன்றும்
அவிழ்ந்திட அவிழ்ந்திட
இறுகும் நெஞ்சங்கள்
நெகிழ்ந்திட நெகிழ்ந்திட
குற்றம் எனில்
நியாயம் எது
சட்டம் எனில்
தர்மம் எது
வேறோர் இவள்
வேறோர் கதை
வேறோர் இருள்
வேறோர் ஒளி
இருண்ட வானோடு
ஒளி மழை பொழிந்திட
குருதி கறை யாவும்
இறுதியில் அழிந்திட