Saetril Oru Sengazhani |
---|
சேற்றில் ஒரு செங்கழனி
திங்களொரு பூ மலரும்
சேற்றில் ஒரு செங்கழனி
திங்களொரு பூ மலரும்
நூற்றில் ஒரு பூ பறித்து
போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா
நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா
சேற்றில் ஒரு செங்கழனி
திங்களொரு பூ மலரும்
நூற்றில் ஒரு பூ பறித்து
போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா
நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா
பாளை விரித்தார் போல்
கள்ளம் இல்லா சிரிப்பில்
ஆளை வளைக்கின்ற சுகம் என்னவோ
மாலை தொடுத்தார் போல்
கைகள் தரும் அணைப்பில்
நாலும் புரிகின்ற நயம் என்னவோ
வாழைக் குருத்தாட்டம்
வஞ்சம் இன்றி வளர்ந்த பெண்ணை
வாழ்வில் துணையாக
சொந்தம் கொண்டு நன்மை செய்வாய்
அன்பே என்றும் அய்யா என்றும்
சொல்ல சொல்ல கொள்ளை இன்பம் ஏனோ
அதில் சுவைப்பது தான் ஊறி வரும் தேனோ
சேற்றில் ஒரு செங்கழனி
திங்களொரு பூ மலரும்
சேற்றில் ஒரு செங்கழனி
திங்களொரு பூ மலரும்
நூற்றில் ஒரு பூ பறித்து
போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணே
நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணே
நாதம் பிறக்காத
வீணை என்ன வீணை
நேசம் பிறக்காமல் உறவில்லையே
பாசக் கொடி போல ஒன்றை ஒன்று பின்னும்
மோகம் வளராமல் சுகம் இல்லையே
நேத்து அறியாத இன்பம் எல்லாம்
கண்டேன் இன்று
நாளை மணம் கொள்வேன் இன்னும் இன்னும்
கலைகள் சொல்வாய்
கட்டில் தந்து தொட்டில் கண்டு
மங்கை உந்தன் நிழலில் நின்று வாழ்வேன்
என்றும் மன்னன் உந்தன் மடியில் இன்று வாழ்வேன்
சேற்றில் ஒரு செங்கழனி
திங்களொரு பூ மலரும்
சேற்றில் ஒரு செங்கழனி
திங்களொரு பூ மலரும்
நூற்றில் ஒரு பூ பறித்து
போற்றி உன்னை துதித்திடுவேன் கண்ணா
நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணே
நான் ஏற்றி வைத்த தீபம் உந்தன் கண்ணா