Sollividava |
---|
சொல்லி விடவா
சொல்லி விடவா ஆ
உண்மை முழுதும்
சொல்லி விடவா
விழியிலே
தேக்கிய பாஷைகளை
விரலிலே அடக்கிய
ஆசைகளை நெஞ்சிலே
பூட்டிய ஓசைகளை
சொல்லிவிடவா ஆ
நெஞ்சே அதை
சொல்ல விடு நெஞ்சே
வழி அடைப்பது ஏன்
மொழி தடுப்பது ஏன்
என்னை கிறுக்கன்
ஆக்காதே அதை
மறைக்க கூடாதே
தோழன் என வேடம்
தோளில் அது பாரம் என்னுளே
வானம் என தோன்றிடும்
ஒன்றினை சொல்லிடவா
கல்லாய் என்
தோற்றம் உள்ளே நீர்
ஓட்டம் என் உள்ளே
ஆழியான பொங்கிடும்
ஒன்றினை சொல்லிடவா
மௌன சாலை
கடந்து சத்தம் இட்டு
யாவும் சொல்லிவிடவா
நெஞ்சே அதை
சொல்ல விடு நெஞ்சே
வழி அடைப்பது ஏன்
மொழி தடுப்பது ஏன்
என்னை கிறுக்கன்
ஆக்காதே அதை
மறைக்க கூடாதே
சொல்லிவிடவா
சொல்லிவிடவா
சொல்லிவிடவா
தாகம் அவன்
கண்ணில் மேகம் நான்
விண்ணில் நான் சொற்கள்
பொழிகையிலே ஆவி
என்றாகியே மறைவது ஏன்
தீயாய் அவள்
முன்னே பூவோ என்
பின்னே கை நீட்டி
தருகையிலே காற்றினில்
பூ அது கரைவது ஏன்
இன்று சொல்லிவிடவா
ஜென்மம் சில தாண்டி
சொல்லிவிடவா
நெஞ்சே அதை
சொல்ல விடு நெஞ்சே
வழி அடைப்பது ஏன்
மொழி தடுப்பது ஏன்
என்னை கிறுக்கி
ஆக்காதே அதை
மறைக்க கூடாதே
சொல்லிவிடவா
சொல்லிவிடவா உண்மை
முழுதும் சொல்லி விடவா
வெளியிலும்
போர்க்கள பூமியடா
மனதுமே போர்க்களம்
ஆனதடா வார்த்தைகள்
என்னை கொல்லுதுடா
சொல்லிவிடவா