Unnai Naan Ariven |
---|
ஆஆ ஹா
ஆஆ ஹா ஹா
ஹா ஹா
உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்
யார் இவர்கள்
மாயும் மானிடர்கள்
ஆட்டிவைத்தால் ஆடும்
பாத்திரங்கள்
உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்
தேவன் என்றால்
தேவன் அல்ல தரைமேல்
உந்தன் ஜனனம் ஜீவன்
என்றால் ஜீவன் அல்ல
என்னைப்போல் இல்லை
சலனம்
நீயோ வானம்
விட்டு மண்ணில் வந்த
தாரகை நானோ யாரும்
வந்து தங்கி செல்லும்
மாளிகை
ஏன் தான்
பிறந்தாயோ இங்கே
வளர்ந்தாயோ காற்றே
நீ ஏன் சேற்றின் வாடை
கொள்ள வேண்டும்
உன்னை நான்
அறிவேன் என்னை
அன்றி யாா் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார்
துடைப்பார்
ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆ