Vaaren Vaaren Seemaraja |
---|
நெருப்பான நெல்லையிலே
பொறுப்பான மன்னனடா
ஊரை சிறப்பாக வைத்திடவே
செயலாற்றும் மன்னனடா
தப்பில்லாத மனசு கொண்ட
தமிழ்நாட்டு சிங்கமடா
அவன் அப்பன் காசு அள்ளி இரைக்க
அவதரிச்ச தங்கமடா
வாரேன் வாரேன் சீமராஜா
வழிய விடுங்கடா
நான் வேஷமில்லா பாசக்காரன்
நெசம்தான் நம்புங்கடா
சுயநலமே பொதுநலமா
ஏத்துவேனே கொடிய
என் பொதுநலமும் சுயநலந்தான்
பாத்துக்கோ என் படைய
என் பேரை கேக்க கூடும் பாரு
அரங்கு அரங்கு
நான் ஏழைக்கேத்த ஏரோபிளேனு
ஒதுங்கு ஒதுங்கு
வாரேன் வாரேன் சீமராஜா
வழிய விடுங்கடா
நான் வேஷமில்லா பாசக்காரன்
நெசம்தான் நம்புங்கடா
போட்டி போட்டு அன்பு செஞ்சி
லைக்ஸ் அள்ளும் என் சேட்டை
நோக்கம் போல கருத்தும் சொல்லி
வாங்கி போவேன் பாராட்ட
விவசாயி இல்லையினா
அடுப்புல சோறும் பொங்காதுடா
பெரியோர்கள் சொன்னாலுமே
அதையே நானும் சொல்வேனடா
ஏ ஊரெல்லாம் எம்படத்த
போட்டா ஆகும் ட்ரெண்ட்டு
நான் வாலில்லா பட்டாம்பூச்சி
எல்லாருக்கும் பிரண்டு
எதிரியாவே இருந்தாலும்
அவன மதிக்க பழகனுண்டா
வலது கையி கொடுக்கிறது
இடது கைக்கும் தெரியனும்டா
வாரேன் வாரேன் சீமராஜா
வழிய விடுங்கடா
நான் வேஷமில்லா பாசக்காரன்
நெசம்தான் நம்புங்கடா
கும்தலக்க கும்மா
கும்தலக்கல கும்தலக்கல
கால வார நூறு பேரு
ஷேப்பா நீயும் கேம் ஆடு
தூக்கி விடத்தான் கோடி பேரு
துணிஞ்சி போயி போராடு
பணம் காச சேர்த்து வச்சா
சுகரு பீபி ஏறுமடா
ஒன் பை டூ டீ குடிச்சா
அது தான் டேஸ்ட்டு கேளுங்கடா
நான் வீராப்ப காட்டிபுட்டு
தந்ததில்லை டிமிக்கி
யார் ஜால்ராவ தட்டயிலும்
வாசிப்பேனே அமுக்கி
டிகிரி வாங்கி குவிச்சாலும்
தமிழு நமது தனி பெரும
அரைச்ச மாவ அரைச்சாலும்
அதுக்கும் வேணும் ஒரு திறம
வாரேன் வாரேன் சீமராஜா
ராஜா
வழிய விடுங்கடா
ராஜா
நான் வேஷமில்லா பாசக்காரன்
நெசம்தான் நம்புங்கடா