Vetri Meethu Vetri |
---|
வெற்றி மீது
வெற்றி வந்து என்னை
சேரும் அதை வாங்கித்தந்த
பெருமை எல்லாம்
உன்னைச்சேரும்
பெற்றெடுத்து
பெயா் கொடுத்த அன்னை
அல்லவோ நீ பேசுகின்ற
தெய்வம் என்பது உண்மை
அல்லவோ
வெற்றி மீது
வெற்றி வந்து என்னை
சேரும் அதை வாங்கித்தந்த
பெருமை எல்லாம்
உன்னைச்சேரும்
தாய் பாலில்
வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழை
கண்டேன்
உண்ணாமல்
இருக்கக் கண்டேன்
உறங்காமல் விழிக்க
கண்டேன்
மற்றவர்க்கு
வாழுகின்ற உள்ளம்
என்னவோ அது
உன்னிடத்தில் நான்
அறிந்த பாடம் அல்லவோ
வெற்றி மீது
வெற்றி வந்து என்னை
சேரும் அதை வாங்கித்தந்த
பெருமை எல்லாம்
உன்னைச்சேரும்
அன்னை சிந்தும்
கண்ணீரெல்லாம்
பிள்ளையினால்
பன்னீராகும்
ஆசை தரும்
கனவுகளெல்லாம்
அவனால்தான்
நினவுகளாகும்
அன்று தொட்டு
நீ நினைத்த எண்ணம்
என்னம்மா அதை இன்று
தொட்டு நான் முடிக்கும்
வண்ணம் பாரம்மா
வெற்றி மீது
வெற்றி வந்து என்னை
சேரும் அதை வாங்கித்தந்த
பெருமை எல்லாம்
உன்னைச்சேரும்