Aadhiyilum Paraiyan Alla |
---|
டயலாக்
யாரடி கள்ளி
நீதான் அடாத இருளிலே வந்து
பேரிடி சூழும் வேளை
பிணத்தினை சுடவும் ஆனாய்
கூறடி உண்மை யாவும்
உறையாமல் விடவும் மாட்டேன்
பாரடி சுடுகோலாலே
பதைத்திட சிதைத்து செல்வேன்
டயலாக்
டயலாக்
ஆதியிலும் பறையனல்ல
ஜாதியிலும் பறையனல்ல
ஆதியிலும் பறையனல்ல
ஜாதியிலும் பறையனல்ல
நீதியிலும் பறையனல்லவே
நான் பாதியில் பறையனானேனே
ஆதியிலும் பறையனல்ல
ஜாதியிலும் பறையனல்ல
நீதியிலும் பறையனல்லவே
நான் பாதியில் பறையனானேனே
வெள்ளிப் பணம் கேட்டவர்க்கு
அள்ளி அள்ளி ஈன்ற கையால்
வெள்ளிப் பணம் கேட்டவர்க்கு
அள்ளி அள்ளி ஈன்ற கையால்
கொள்ளிக் காசு வாங்கலானேனே
நான் தொல்லுலகில் பறையனானேனே
ஆதியிலும் பறையனல்ல
ஜாதியிலும் பறையனல்ல
நீதியிலும் பறையனல்லவே
நான் பாதியில் பறையனானேனே
தத்துவத்தின் நீதியிலே
ஜாதியில்லை பேதமில்லை
தத்துவத்தின் நீதியிலே
ஜாதியில்லை பேதமில்லை
இத்தரையில் உன் வசவாலே வீணே
இத்தரையில் உன் வசவாலே வீணே
இன்று நான் பறையனானேனே
ஆதியிலும் பறையனல்ல
ஜாதியிலும் பறையனல்ல
நீதியிலும் பறையனல்லவே
நான் பாதியில் பறையனானேனே