Aagaatha Kaalam |
---|
ஆகாத காலம்
ஒன்னு அடியோட
ஊரக்கொன்னு
புதைச்சிட்டுப் போயிடுச்சே
சானேற கீழ
தள்ளும் சதிகார
கூட்டம் எங்க
பொனந்தின்னக் கூடிடுச்சே
கொடிகாலாக
நீண்ட எங்க குடிசையும்
கூரையும் தீஞ்சது தீயாள
ஓஹோ
அடி வேராக
வாழ்ந்த எங்க தலமுற
கோபுரம் சாஞ்சது யாரால
முடிவுல போனோமே தோத்து
விளங்கலையே இந்த கூத்து
ஆகாத காலம்
ஒன்னு அடியோட
ஊரக்கொன்னு
புதைச்சிட்டுப் போயிடுச்சே
சானேற கீழ
தள்ளும் சதிகார
கூட்டம் எங்க
பொனந்தின்னக் கூடிடுச்சே
ஹே வெல்லாம
காடு காஞ்சா ஒரு போகம்
தான் பாழாப்போகும்
கண்ணான காடு தீஞ்சா
உயிா் எல்லாமே ஊனம் ஆகும்
அன்னாந்து பார்த்த
வானம் மழை சிந்தாம ஏது
பூமி மல்லாந்து போன நீதீ
வெறும் மண்ணாகிப்போச்சே
சாமி தல ஓஞ்சோமே
அஞ்சாமலே வாழ்ந்தோமே
ஏமாந்துதான் மாஞ்சோமே
ஆகாத காலம்
ஒன்னு அடியோட
ஊரக்கொன்னு
புதைச்சிட்டுப் போயிடுச்சே
அப்பாவியான நாங்க
அடிப்பட்டோமே நாடே பார்க்க
கொத்தோடு நாங்க சாய ஒரு
ஆளில்ல கேள்வி கேட்க
முன்னால ஆண்ட
கூட்டம் முகம் இல்லாம
மூலி ஆனோம் வென்னீரு
பாஞ்ச வேரா தெசை எங்கேயும்
காணா போனோம் புலியானோமே
அஞ்சாமலே வாழ்ந்தோமே
ஏமாந்துதான் மாஞ்சோமே
ஆகாத காலம்
ஒன்னு அடியோட
ஊரக்கொன்னு
புதைச்சிட்டுப் போயிடுச்சே
சானேற கீழ
தள்ளும் சதிகார
கூட்டம் எங்க
பொனந்தின்னக் கூடிடுச்சே