Aagaya Thamarai

Aagaya Thamarai Song Lyrics In English


ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே

ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே

ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே

ஆகாய தாமரை
அருகில் வந்ததே

மெல்லிசை பாட்டு
முழங்கிட கேட்டு
இதயமே இளகுதா
இள மயிலே
நீ மந்திரன் போலே
மணி தமிழாலே
இசைக்கிறாய் இழுக்கிறாய்
இளவரசே

ஒரு மட மாது
இணை பிரியாது
இருக்குமோ மறக்குமோ
ஒரு பொழுதென்னும்
அருவியை மீனும்
பிரியுமோ விலகுமோ

என்று இந்த
லீலை எல்லாம்
எல்லை தாண்டி போவது
கைகள் ஏந்தும்
வேளையெல்லாம்
கன்னி போகும் பூவிது

முத்தம் தலைவன்
இதழ் பதித்திட
இதயம் தித்தித்திட
புதிய மது ரசம் வழிந்திட


ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே

புன்னகை முல்லை
புது விழி குவளை
அழகிய அதரங்கள்
அரவிந்த பூவோ
உன் கன்னங்கள்
ரோஜா கொடி இடை அள்ளி
நிறத்தினில் நீ ஒரு
செவ்வந்திப்பூவோ

செண்பகம் ஒன்று
பெண் முகம் கொண்டு
எனக்கென பிறந்ததோ
குன்றினில் தோன்றும்
குறிஞ்சியும் இங்கே
குமரியாய் விளைந்ததோ

மின்னும் வண்ண
பூக்கள் எல்லாம்
மாலை என்று ஆகலாம்
மன்னன் தந்த மாலை எந்தன்
நெஞ்சை தொட்டு ஆடலாம்
நெஞ்சை தழுவியது
துலங்கிட உறவு விளங்கிட
இனிய கவிதைகள் புனைந்திட

ஆகாய தாமரை
அருகில் வந்ததே
நாடோடி பாடலில்
உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே
காதல் துணை வேண்டியே

ஆகாய தாமரை
அருகில் வந்ததே