Aararirao

Aararirao Song Lyrics In English


ஆராரிராரோ
நான் பாடுகின்றேன்
உன் சோகம் மறந்து தூங்கடி
உன் காயம் எல்லாம்
தானாக தீரும்
என் தோளில் சாய்ந்துதூங்கடி

கனவாய் எல்லாம்
மறைந்தே போகும்
விடிந்தால் இருள்
விட்டு பறக்கும்
உனக்காய் தினம்
விழித்தேன் அன்பே
உறங்கவில்லையே

கண்ணீர் உந்தன்
கன்னத்தை தொட்டால்
என் விரல் வந்து
தொட்டு துடைக்கும்
வெண்ணிலா மேலே கரைகள் எல்லாம்
குறைகள் இல்லையே

ஆராரிராரோ
நான் பாடுகின்றேன்
உன் சோகம் மறந்து தூங்கடி


உயிரே உந்தன்
உணர்வில் ஒரு
சலனம் இன்றி
என்ன நினைப்பு
வழிகள் எல்லாம் தொலையும் வரை
காவலிருப்பேன்

முள் மேல் உந்தன்
நிழல் விழுந்தால்
குறைந்தா விடும்
உன் மதிப்பு
உன்னை பார்கின்ற நொடி போதுமே
உயிர் பிழைப்பேன்

ஆராரிராரோ
நான் பாடுகின்றேன்
உன் சோகம் மறந்து தூங்கடி
உன் காயம் எல்லாம்
தானாக தீரும்
என் தோளில் சாய்ந்துதூங்கடி