Ammamma Keladi |
---|
அம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி
சொல்லாமல் வந்தது மீதிஓ
அம்மம்மா
இதுதான் சுகமோ
இன்னும் பெறுமோ
இளமை தருமோ
மயக்கம் வருமோஹா(டயலாக்)
அம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி
சொல்லாமல் வந்தது மீதிஓ
அம்மம்மாஆஅஆஆஅ
பிஞ்சாக நானிருந்தேனே
பெண்ணாக வளர்த்து விட்டானே
அஞ்சாமல் அணைத்து விட்டானே
அச்சாரம் கொடுத்து விட்டானே
பிஞ்சாக நானிருந்தேனே
பெண்ணாக வளர்த்து விட்டானே
அஞ்சாமல் அணைத்து விட்டானே
அச்சாரம் கொடுத்து விட்டானே ஹோ
அம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி
சொல்லாமல் வந்தது மீதிஓ
அம்மம்மாஆஅ
அவனோ இளைஞன்
இவளோ சிறுமி
ஒரு நாள் கனவில்
உலகே மறந்தார்ஆ(டயலாக்)
முத்தாரம் சரிய வைத்தானே
முள் மேலே தூங்க வைத்தானே
நூலாக இளைக்க வைத்தானே
பாலாக வெளுக்க வைத்தானேஹோ
அம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி
சொல்லாமல் வந்தது மீதிஓ
அம்மம்மா
அய்யய்யோ பாவமே
அணையாத மோகமே
அனுபவம் கொஞ்சமே
அலையுதே நெஞ்சமே(டயலாக்)
தன்னாலே பேச வைத்தானே
தண்ணீரைக் குடிக்க வைத்தானே
தள்ளாடி நடக்க வைத்தானே
எல்லோரும் சிரிக்க வைத்தானேஹோ
அம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி
சொல்லாமல் வந்தது மீதிஓ
அம்மம்மா