Ammamma Sollamma En |
---|
அம்மம்மா சொல்லம்மா என் நெஞ்சில் உள்ள கதை என்னவென்று சொல்லு கிளியே அக்கக்கா அக்கக்கோ இன்றென்னை சொல்ல வந்த வெள்ளை மன செல்லக்கிளியே
அம்மம்மா சொல்லம்மா என் நெஞ்சில் உள்ள கதை என்னவென்று சொல்லு கிளியே அக்கக்கா அக்கக்கோ இன்றென்னை சொல்ல வந்த வெள்ளை மன செல்லக்கிளியே
மார்கழி மாதம் வாடைக் குளிரில் நானிங்கு காத்திருந்தேன் பூமி என்னும் வாசல் முழுதும் ஆசையில் கோலமிட்டேன் காண்பது எல்லாம் காதல் தலைவன் நீ வரும் பாதைகளே கேட்பது எல்லாம் கண்ணா உந்தன் காலடி ஓசைகளே
ஆசையென்னும் அருவிக்குள் விழுந்துவிட்டேன் ஆடை தன்னை மயக்கத்தில் நழுவவிட்டேன் இளமையும் விரகமும் எனக்கின்று புரிந்தது
அம்மம்மா சொல்லம்மா என் நெஞ்சில் உள்ள கதை என்னவென்று சொல்லு கிளியே அக்கக்கா அக்கக்கோ இன்றென்னை சொல்ல வந்த வெள்ளை மன செல்லக்கிளியே
ஆசைகளெல்லாம் கானல் நதியில் ஓடிடும் நீரலையா காதலும் கூட ஓர் நடக்கும் ஓரங்க நாடகமா நீ ஒரு பாதி இன்றே அதனால் பாதியில் நீ பிரிந்தாய் ஆனந்த மேகம் கண்ணீர் பொழியும் வேதனை நீ கொடுத்தாய்
மோகனம் பாடிய பறவை இது சோகத்தில் உன்னை எண்ணி அழுகிறது ஒரு மனம் பிரிந்தது ஒரு மனம் எரிந்தது
அம்மம்மா சொல்லம்மா கண்ணுக்குள் முள்ளை வைத்த கண்ணன் கதை சொல்லு கிளியே அக்கக்கா அக்கக்கோ ஆகாச பந்தலிட்டு ஆடக் கண்ட சின்னக்கிளியே
அம்மம்மா சொல்லம்மா கண்ணுக்குள் முள்ளை வைத்த கண்ணன் கதை சொல்லு கிளியே அக்கக்கா அக்கக்கோ ஆகாச பந்தலிட்டு ஆடக் கண்ட சின்னக்கிளியே