Annaiye Annaiye Annaiye |
---|
அன்னையே அன்னையே அன்னையே
அருள் தாரும் மேரி தாயே
அன்னையே அருள்தாரும் மேரி தாயே
ஊன் வினையதாலே நானே
உள்ளம் உடைந்து நொந்தேன்
ஊன் வினையதாலே நானே
உள்ளம் உடைந்து நொந்தேன்
பாழும் சமூகம் என்னும்
பழிபீடம் தன்னில் வீழ்ந்தேன்
கலைசேர் நிலாவை மறைத்திடும்
கார்மேகம் போல ஜாதி
கலைசேர் நிலாவை மறைத்திடும்
கார்மேகம் போல ஜாதி
மலைபோல் என் வாழ்வில் தடையாய்
வந்து நின்றதே என் செய்வேன்
அன்னையே அன்னையே அன்னையே
அருள் தாரும் மேரி தாயே
அன்னையே அன்னையே அன்னையே
ஆண் துணையில்லாத பெண்கள்
அடைவாரே துன்பம் என்போல்
ஆண் துணையில்லாத பெண்கள்
அடைவாரே துன்பம் என்போல்
வான் மீதுலாவும் கிளிபோல்
மகிழ்வாக வாழ நினைத்தேன்
பாய்ந்தோடும் ஆற்றில் ஓடம்
படும் பாட்டைப் போல ஆனேன்
பாய்ந்தோடும் ஆற்றில் ஓடம்
படும் பாட்டைப் போல ஆனேன்
தூய என் காதல் கனவோ
துயர் நீங்குமோ என் வாழ்வில்
அன்னையே அன்னையே அன்னையே
அருள் தாரும் மேரி தாயே
அன்னையே அன்னையே அன்னையே