Arugil Vanthaal

Arugil Vanthaal Song Lyrics In English


அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே
எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர்
போதும் போதுமே

அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே
எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர்
போதும் போதுமே

அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே

மலரே மலரே நீ யாரோ
வஞ்சனை செய்தவர்தான் யாரோ
உன்னை சூடி முடித்ததும் பெண்தானோ
பின் தூக்கி எறிந்ததும் அவள்தானோ

அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே


இதயம் என்பது ஒரு வீடு
அன்றும் இன்றும் அவள் வீடு
அது மாளிகை ஆனதும் அவளாலே
வெறும் மண் மேடானதும் அவளாலே

அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே
அமைதி இல்லா வாழ்வு தந்தே
எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர்
போதும் போதுமே

அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே