En Inba Jothiye |
---|
என் இன்ப ஜோதியே
உன் அன்புப் பார்வையால்
இன்பத் தென்றல்
எந்தன் வாழ்வில்
இசைந்தே வீசுதே
பாரில் நான் பாக்யசாலி
வாழ்வில் நான் பாக்யவதி
இன்பம் துன்பம்
என்றும் ஒன்றாய்
பங்கு கொள்வோம்
பங்கு கொள்வோம்
கண்ணும் கண்ணும் ஒன்றையொன்று
கலந்த அந்நாளே
கள்ளம் இல்லா காதல் கொண்டேன்
எந்தன் கண்ணாளாகண்ணும் கண்ணும்
காதல் என்னும் போதையுண்டோம்
கண்ணே இன்பம் கண்டோம்
ஜாதியென்னும் பேயை வெல்லும்
அஞ்சா நெஞ்சம் கொண்டோம்
லாலியே பாடி ஜாலியாய் ஓடி
நாளுமே ஆடுவோம்
பாலுடன் தேனும் பாகுமே
சேர்ந்த பான்மையாய் கூடுவோம்
ஆதாம் ஏவாள் போலவே
இராதா கிருஷ்ணன் போலவே
நாதம் கீதம் போலவே
இருவர் : நாமும் ஒன்றாய் வாழுவோம்
ரிண்டின் டாண் ஹுலா ஹுலா
டகுடிகு டகுடிகு டகுடிகு டகுடிகு
ரிண்டின் டாண் ஹுலா ஹுலா
டிகுடிகு டிகுடிகு டிகுடிகு டிகுடிகு டி
நீல வான மீதிலே
உலாவும் கிள்ளை ஜோடிபோல்
மாலையில் உலாவுவோம்
சோலையில் குலாவுவோம்
நீல பொய்கையில் நீந்தும்
அன்னம் போல் நாமும்
ஓடத்தின் மீதே
இருவர் : மாலையில் உலாவுவோம்
சோலையில் குலாவுவோம்
ஆசை போலவே
ஆகும் யாவுமே
இருவர் : மாசில்லாத நேசத்தாலே
மனம் போலே சுகம் பெறுவோமே
ராரரா ரம்பம் பம்
ராரரா ரம்பம் பம்
ஹாஆஅஆஆஆ
இல்லறம் ஒன்றுதான்
நல்லறம் என்றதோர்
இருவர் : வள்ளுவன் வார்த்தையே
வாழ்வின் கீதமாம்
ரிண்டின் டாண் ஹுலா ஹுலா
டகுடிகு டகுடிகு டகுடிகு டகுடிகு
ரிண்டின் டாண் ஹுலா ஹுலா
டிகுடிகு டிகுடிகு டிகுடிகு டிகுடிகு டி
ராரரா ரம்பம் பம்
ராரரா ரம்பம் பம்