Ennaalum Vaazhvilae Sad

Ennaalum Vaazhvilae Sad Song Lyrics In English


எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம்
காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே

எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே

கண்ணாற கண்ட காட்சி
கானல் நீராய் மாறிப்போமோ
என் உள்ளம் கொண்ட இன்பம்
என்னை விட்டு நீங்கிபோமோ

கண்ணாற கண்ட காட்சி
கானல் நீராய் மாறிப்போமோ
என் உள்ளம் கொண்ட இன்பம்
என்னை விட்டு நீங்கிபோமோ

கண்ணீரே சொந்தமாகும்
காலம் வந்து சேருமோ
கலையாத துயர் மேகம்
என் வாழ்வில் என்றும் சூழுமோ

எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம்
காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே


உன்னாலே எந்தன் உள்ளச் சோலை
மீண்டும் பூத்திடாதோ
என்னாசை அன்பரோடு
என்னைக் காலம் சேர்த்திடாதோ

உன்னாலே எந்தன் உள்ளச் சோலை
மீண்டும் பூத்திடாதோ
என்னாசை அன்பரோடு
என்னைக் காலம் சேர்த்திடாதோ

மின்னாத பொன்னைப்போலே
நானும் இங்கே வாழ்வதா
உனையன்றி துணையின்று
என் வாழ்வில் யாருமில்லையே

எந்நாளும் வாழ்விலே
கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம்
காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே