Ennamellam Or Idathaye

Ennamellam Or Idathaye Song Lyrics In English


எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
கண்ணிரெண்டும்
ஓர் முகத்தையே தேடுதே

எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
கண்ணிரெண்டும்
ஓர் முகத்தையே தேடுதே

எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே

தேனேந்தும் மலராகி
வானேந்தும் நிலவாகி
தேனேந்தும் மலராகி
வானேந்தும் நிலவாகி
சிந்தை கவர்ந்திடுதேஏ
சிந்தை கவர்ந்திடுதே
எந்தன் மணி விழி மயங்கிடுதே

செங்கதிர் சுடர் போலே
என் கரம் நீண்டிருந்தால்
செங்கதிர் சுடர் போலே
என் கரம் நீண்டிருந்தால்
சிங்காரச் சிலை தன்னை
அந்த சிங்காரச் சிலை தன்னை
இங்கிருந்தே தொடுவேன்

எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே


மனம் விரும்பும் காட்சியை
கனவினில் கண்டாலும்
மையல் தீருமா நுரை தின்று பசியாறுமாஆஆ
மாமலரின் நிழல்தான் மணம் வீசுமா
முத்து மாலையின் நிழல்தான் விலை போகுமா

நெய்யும் தறியில் நூல் நெருங்குவது போலே
நேச முகம் இரண்டும் நெருங்குமா
எங்கள் பிரிந்த உறவும் திரும்புமாஆஅஆஆ
எங்கள் பிரிந்த உறவும் திரும்புமா

எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
கண்ணிரெண்டும்
ஓர் முகத்தையே தேடுதே

எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே