Ennamellam Or Idathaye |
---|
எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
கண்ணிரெண்டும்
ஓர் முகத்தையே தேடுதே
எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
கண்ணிரெண்டும்
ஓர் முகத்தையே தேடுதே
எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
தேனேந்தும் மலராகி
வானேந்தும் நிலவாகி
தேனேந்தும் மலராகி
வானேந்தும் நிலவாகி
சிந்தை கவர்ந்திடுதேஏ
சிந்தை கவர்ந்திடுதே
எந்தன் மணி விழி மயங்கிடுதே
செங்கதிர் சுடர் போலே
என் கரம் நீண்டிருந்தால்
செங்கதிர் சுடர் போலே
என் கரம் நீண்டிருந்தால்
சிங்காரச் சிலை தன்னை
அந்த சிங்காரச் சிலை தன்னை
இங்கிருந்தே தொடுவேன்
எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
மனம் விரும்பும் காட்சியை
கனவினில் கண்டாலும்
மையல் தீருமா நுரை தின்று பசியாறுமாஆஆ
மாமலரின் நிழல்தான் மணம் வீசுமா
முத்து மாலையின் நிழல்தான் விலை போகுமா
நெய்யும் தறியில் நூல் நெருங்குவது போலே
நேச முகம் இரண்டும் நெருங்குமா
எங்கள் பிரிந்த உறவும் திரும்புமாஆஅஆஆ
எங்கள் பிரிந்த உறவும் திரும்புமா
எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
கண்ணிரெண்டும்
ஓர் முகத்தையே தேடுதே
எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே