Ganavaangale Vaango |
---|
கனவான்களே வாங்கோ
கண்டு களித்துப் போங்கோ
கனவான்களே வாங்கோ
கண்டு களித்துப் போங்கோ
நம் ஆட்டங்கள் பார்த்து மகிழ்ந்து
பணம் எடுத்துத் தாங்கோ
நம் ஆட்டங்கள் பார்த்து மகிழ்ந்து
பணம் எடுத்துத் தாங்கோ
கனவான்களே வாங்கோ
கண்டு களித்துப் போங்கோ
பாம்பை எடுத்ததை காட்டிடுவோம்
பூ நாகமும் கொண்டாட்டிடுவோம்
நல்ல பாம்பை எடுத்ததை காட்டிடுவோம்
பூ நாகமும் கொண்டாட்டிடுவோம்
செந்நிற நாகமும் காட்டிடுவோம்
செம்பொன்னுடன் காசும் போடுங்கோ
செந்நிற நாகமும் காட்டிடுவோம்
செம்பொன்னுடன் காசும் போடுங்கோ
கனவான்களே வாங்கோ
கண்டு களித்துப் போங்கோ
கனவான்களே வாங்கோ
கண்டு களித்துப் போங்கோ
வானுயர்ந்த பெரு வள்ளி மா மலையில்
வாழ்ந்திருந்தோம் நாமே
அங்கு மானுடன் மழுவும் கொண்ட
ஈசன் வரக் கண்டொ துங்கி வந்தோம்
ஆம்
தேனும் பாலும் அபிஷேகம் கொள்
பழநி ஆண்டவன் மலை சென்றோம்
அங்கு காணும் காவடியும் சங்கு நாதமும்
அரகரா எனும் ஒலியும்
ஆம் ஹாம்
காதைத் துளைக்கவே செந்தமிழகத்தியர்
பொதியமலையில் வந்தோம்
ஆமாம்
ஓதிடும் பல கொடு நோய்கள்
ஓடிடும்படியே செய்யும்
பச்சிலை யுண்டு வேர்களு முண்டு
வேண்டிய நல்ல மருந்துகள் உண்டு
உண்டுஉண்டுஉண்டுஉண்டு
வாங்கோ ஆட்டம் பார்த்திட்டுப் போங்கோ
வாங்கோ ஆட்டம் பார்த்திட்டுப் போங்கோ
இருவர் : கனவான்களே வாங்கோ
கண்டு களித்துப் போங்கோ
கனவான்களே வாங்கோ
கண்டு களித்துப் போங்கோ