Irukkum Idatthai Vittu |
---|
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி
ஞானத் தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி
ஞானத் தங்கமே
உன்னையே நினைத்திருப்பான்
உண்மையைத்தான் உரைப்பான்
ஊருக்குப் பகையாவான்
ஞானத் தங்கமே ஏஏ
உன்னையே நினைத்திருப்பான்
உண்மையைத் தான் உரைப்பான்
ஊருக்குப் பகையாவான்
ஞானத் தங்கமே
அவன் ஊழ் வினை என்ன சொல்வேன்
ஞானத் தங்கமே ஞானத் தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி
ஞானத் தங்கமே
நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து
நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான்
ஞானத் தங்கமே
நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான்
ஞானத் தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன்
ஞானத் தங்கமே ஞானத் தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி
ஞானத் தங்கமே
தொண்டுக்கென்றே அலைவான்
கேலிக்கு ஆளாவான்
கண்டு கொள்வாய் அவனை
ஞானத் தங்கமே ஏஏஏஏ
தொண்டுக்கென்றே அலைவான்
கேலிக்கு ஆளாவான்
கண்டு கொள்வாய் அவனை
ஞானத் தங்கமே
அவன் கடவுளில் பாதியடி
ஞானத் தங்கமே ஞானத் தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி
ஞானத் தங்கமே
பிள்ளையைக் கிள்ளி விட்டு
தொட்டிலை ஆட்டி விட்டு
பிள்ளையைக் கிள்ளி விட்டு
தொட்டிலை ஆட்டி விட்டு
தள்ளி நின்றே சிரிப்பான்
ஞானத் தங்கமே
பிள்ளையைக் கிள்ளி விட்டு
தொட்டிலை ஆட்டி விட்டு
பிள்ளையைக் கிள்ளி விட்டு
தொட்டிலை ஆட்டி விட்டு
தள்ளி நின்றே சிரிப்பான்
ஞானத் தங்கமே
அவன்தான் தரணியைப் படைத்தான்டி
ஞானத் தங்கமே ஞானத் தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி
ஞானத் தங்கமே