Kaadhal Ennum Kaaviyam |
---|
காதல் என்னும் காவியம்
கன்னி நெஞ்சின் ஓவியம்
ஓராயிரம் பாடலும் பாடுமே
மங்கை உள்ளமேஏ வருவான்
காதல் என்னும் காவியம்
கன்னி நெஞ்சின் ஓவியம்
ஓராயிரம் பாடலும் பாடுமே
மங்கை உள்ளமேஏ வருவான்
காத்தாடும் முந்தானை
கதை சொல்லும் போது
கவி பாடி உரையாட
அழைத்தேன் உன்னை
நதியோரம் மலர் தோட்டம்
நமக்காகத்தானே
விழியோரம் மொழி பேசி உறவாட வா
இதுதான் வயது
இதுதான் பருவம்
இது தான் உறவு
சுகம் நூறாக வேண்டும்
நாம் வாழ ஒரு வீடு
அமைத்தேனே நெஞ்சில்
நாம் போக ஒரு பாதை
கண்டேன் கண்ணில்
கை கோர்த்து செல்வோமே
உல்லாச பயணம்
ஒரு தீபம் ஏற்றுங்கள்
சுபமே சகுனம்
இது தான் வயது
இது தான் பருவம்
இது தான் உறவு
சுகம் நூறாக வேண்டும்
காதல் என்னும் காவியம்
கன்னி நெஞ்சின் ஓவியம்
ஓராயிரம் பாடலும் பாடுமே
மங்கை உள்ளமேஏ வருவான்