Kaasiyil Vaazhum Karunai Kadale |
---|
காசியில் வாழும் கருணைக் கடலே
காசியில் வாழும் கருணைக் கடலே
கடைக்கண் பாராய் அடைக்கலம் நீயே
காசியில் வாழும் கருணைக் கடலே
கருணைக் கடலே
கடைக்கண் பாராய் அடைக்கலம் நீயே
அனைவரும் : காசியில் வாழும் கருணைக் கடலே
பேசிடில் உனைப் போல தெய்வம் உண்டோ
பேசிடில் உனைப் போல தெய்வம் உண்டோ
பேரருள் புரிவாய் என் துயர் தீராய்
பேரருள் புரிவாய் என் துயர் தீராய்
காசியில் வாழும் கருணைக் கடலே
கருணைக் கடலே
தஞ்சம் என்றே உன்னை நம்பி வந்தேன்
நெஞ்சம் புண்ணாகி மிக நொந்தேன்
தஞ்சம் என்றே உன்னை நம்பி வந்தேன்
நெஞ்சம் புண்ணாகி மிக நொந்தேன்
சஞ்சலம் தீர விஸ்வநாதா ஆஅஆ
சஞ்சலம் தீர சத்தியம் நிலை பெற
அஞ்சேல் என் அபயம் அருள்வாய் தேவா
அஞ்சேல் என் அபயம் அருள்வாய் தேவா
காசியில் வாழும் கருணைக் கடலே
கடைக்கண் பாராய் அடைக்கலம் நீயே
அனைவரும் : காசியில் வாழும் கருணைக் கடலே
கருணைக் கடலே
கருணைக் கடலே
கருணைக் கடலே