Kanja Poovu Kannala |
---|
பாடலாசிரியர் : கருமத்தூர் மணிமாறன்
கஞ்சா பூவு கண்ணால செப்பு செலை உன்னால இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால
கஞ்சா பூவு கண்ணால செப்பு செலை உன்னால இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால
ஒன் தட்டாங்காயி பல்லால நீ சொன்ன ஒத்த சொல்லால சூரியனையும் ஒடைப்பேன்டி கவட்டை எடுத்து கல்லால
கருப்பட்டி கரைச்சு செஞ்சு வச்ச செலையா பச்சரிசி போட்ட பொங்கப்பானை ஒலையா
கருப்பட்டி கரைச்சு செஞ்சு வச்ச செலையா பச்சரிசி போட்ட பொங்கப்பானை ஒலையா
ஈரக்கொலைய சொரண்டியென்ன கொல்லுறாயே கொலையா ஈரக்கொலைய சொரண்டியென்ன கொல்லுறாயே கொலையா
கஞ்சா பூவு கண்ணால செப்பு செலை உன்னால இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால
அந்தி நடுச்சாமம் எழுப்பி அந்த நட்சத்திரம் உலுப்பி ஒன் மூக்குல காதுல தோட மாட்டி தொங்க விடப்போறேன்
அந்த ராத்திரியே கிள்ளி கொஞ்சம் கருத்த மேகம் அள்ளி ஒன் இமைய பூசும் கண்ணு மையா மாத்திக்கொண்டு நானும் வாரேன்
மாடுக்குத்தி கிழிச்சாலும் பொழச்சுக்குவேன்டி ஒன் புருவக்கத்தி குத்திப்புட்டா என்ன செய்யுவேன்டி
சூரிக்கத்தி வீசுனாலும் நிமிந்து நிப்பேன்டி ஒன் சுண்டு விரல் பட்டு போன சுணங்கி போவேன்டி
நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும் திண்டு செமிப்பேன்டி நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும் திண்டு செமிப்பேன்டி
கஞ்சா பூவு கண்ணால செப்பு செலை உன்னால இடுப்பு வேட்டி அவுருதடி நீ சிரிச்சா தன்னால
ஒன் தட்டாங்காயி பல்லால நீ சொன்ன ஒத்த சொல்லால சூரியனையும் ஒடைப்பேன்டி கவட்டை எடுத்து கல்லால