Kanne En Kanne |
---|
கண்ணே என் கண்ணே உன் கன்னத்தில் செவ்வானமா பெண்ணே செம்பொன்னே அது தாய்மையின் வண்ணமா
கண்ணே என் கண்ணே உன் கன்னத்தில் செவ்வானமா பெண்ணே செம்பொன்னே அது தாய்மையின் வண்ணமா
வாசல் வந்த வெண்ணிலா இனி வளர் பிறையாகுமே நம் ஆசை என்னும் கோலமே ஒரு பிள்ளை தோன்றுமே
நீயும் நானும் தாயும் தந்தை ஆகும் காலமே
கண்ணே என் கண்ணே உன் கன்னத்தில் செவ்வானமா பெண்ணே செம்பொன்னே அது தாய்மையின் வண்ணமா
புழுதி காட்டு வாழ்க்கையில் கட்டி தங்கம் வந்ததே அடியே என் கொடியே ஒரு பரிசு கேளடி
மடியை ஏந்தி வந்ததும் ஒரு புதையல் தந்த சாமியே நீயே என் பரிசு இனி புதுசா வேணுமா
என் ஆசை பூங்கொடி உன் ஜீவன் ரெண்டடி என் பங்கு சேர்த்துமே நீ உண்ணுடி
சுக்க மிஞ்சிய மருந்து இருக்கா உன்னை காட்டிலும் உறவு இருக்கா பெத்த தாயை போல் நீ தாங்க கண்ணு பேரு காலம் எனக்கு
தாய் பால் ஊட்டும் வேளையில் தமிழும் சேர்த்து ஊட்டனும் ஊரே கொண்டாட அத பார்த்து ரசிக்கணும்
வீட்டு பாடம் போலவே மாட்டு பாடம் படிக்கணும் கல்வி விவசாயம் ரெண்டும் கண்கள் ஆகுமே
ஆகாய ஊஞ்சலில் தாலாட்டி பார்க்கணும் ஊர் ஆளும் பிள்ளையாய் ஆள் ஆக்கணும்
உன் வயதில் வளருது ஒரு விளக்கு வம்சம் வளக்குற திரு விளக்கு மாசம் பத்துல பொறக்கும் புள்ளைக்கு மாலை காத்து இருக்கு
கண்ணே என் கண்ணே உன் கன்னத்தில் செவ்வானமா பெண்ணே செம்பொன்னே அது தாய்மையின் வண்ணமா
வாசல் வந்த வெண்ணிலா இனி வளர் பிறையாகுமே நம் ஆசை என்னும் கோலமே ஒரு பிள்ளை தோன்றுமே
நீயும் நானும் தாயும் தந்தை ஆகும் காலமே