Kannukkulle Unnai Paaru |
---|
கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
அது காவியம் ஆயிரம் கூறும் எந்தன்
எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
அது காவியம் ஆயிரம் கூறும்
கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
எண்ணத்திலே எழில் வண்ணத்திலே
ஆஆஆஆஆஅ
எண்ணத்திலே எழில் வண்ணத்திலே
மின்னித் திரிகின்ற வெண்ணிலவில்
உன்னை தினம் தினம் காண்கின்றேன்
ஏஏஏஎ
உன்னை தினம் தினம் காண்கின்றேன்
அந்த உணர்ச்சியில் உலகினை மறந்தேன்
கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
அது காவியம் ஆயிரம் கூறும்
இன்பத்தின் எல்லையில் கூடு கட்டிஈ
இன்பத்தின் எல்லையில் கூடு கட்டிஈ
அதில் இன்னிசை பாடும் பறவைகள் நாம்
அன்பினில் பொங்கும் கடல்போலே
அன்பினில் பொங்கும் கடல்போலே
ஆசை அலைகளை வீசிடும் கலையமுதே
கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
ஓடும் அருவியாய் நானிருக்க
ஆஆஆஆ
ஓடும் அருவியாய் நானிருக்க
அதில் ஓடிடும் மீன்போல் துள்ளி வந்தாய்
அதில் ஓடிடும் மீன்போல் துள்ளி வந்தாய்
பாடும் குயிலென நானிருக்க ஆஆஅ
பாடும் குயிலென நானிருக்க
அங்கு ஆடும் மயில் என நீயும் வந்தாய்
கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
இருவர் : அது காவியம் ஆயிரம் கூறும்
கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு
எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு