Maalai Mayangukindra Neram |
---|
மாலை மயங்குகின்ற நேரம்
பச்சை மலை வளரும் அருவியோரம்
மாலை மயங்குகின்ற நேரம்
பச்சை மலை வளரும் அருவியோரம்
காலை கமல மலர்ப் போலே முகமலரைக்
கண்டேன் காதல் கொண்டேன்
காலை கமல மலர்ப் போலே முகமலரைக்
கண்டேன் காதல் கொண்டேன்
நெஞ்சம் துடிதுடிக்க நின்றேன்
இரு நீலக் கருவிழியால் வென்றான்
நெஞ்சம் துடிதுடிக்க நின்றேன்
இரு நீலக் கருவிழியால் வென்றான்
கொஞ்சும் குயிலுடனே கெஞ்சும் என்னை
அணைத்த குமரன் அவன் அமரன்
கொஞ்சும் குயிலுடனே கெஞ்சும் என்னை
அணைத்த குமரன் அவன் அமரன்
மாலை மயங்குகின்ற நேரம்
பச்சை மலை வளரும் அருவியோரம்
எட்டிப் பறந்துச் செல்லும் விண் போல்
எங்கோ ஏகி பறந்து வந்தான் முன்போல்
எட்டிப் பறந்துச் செல்லும் விண் போல்
எங்கோ ஏகி பறந்து வந்தான் முன்போல்
கட்டி பிடித்தினி நான் விட்டு பிரிவதில்லை
கட்டி பிடித்தினி நான் விட்டு பிரிவதில்லை
கண்ணே என்றான் கண்ணன்
கட்டி பிடித்தினி நான் விட்டு பிரிவதில்லை
கண்ணே என்றான் என் கண்ணன்
உடலும் உயிரும் என வாழ்வோம்
இந்த உலகம் செழிக்க நலம் சூழ்வோம்
உடலும் உயிரும் என வாழ்வோம்
இந்த உலகம் செழிக்க நலம் சூழ்வோம்
கடலும் கதிரும் எனக் களித்து மகிழும்
எங்கள் கருத்தில் இன்பம் நிலவும்
கடலும் கதிரும் எனக் களித்து மகிழும்
எங்கள் கருத்தில் இன்பம் நிலவும்
மாலை மயங்குகின்ற நேரம்
பச்சை மலை வளரும் அருவியோரம்
காலை கமல மலர்ப் போலே முகமலரைக்
கண்டேன் காதல் கொண்டேன்