Mahamaayi Aankala Deviye |
---|
ஆயி மகமாயி ஆங்கார தேவியே
அபிராமசுந்தரி ஓங்கார ரூபியே
ஆ ஹாங்
மாயி மகமாயி நீ
மலைக்கன்னி தாயே
மணி மந்திர சேகரி
அருள் புரிவாயேஏஏ
ஓயாது பலி கொள்ளும்
ஒளி முத்துமாரியே
ஒரு சிங்க மீதேறும்
மாகாளி அம்மையே
அம்மா
பேய் பில்லி சூனியம்
கொண்டாடும் நீலியே
பேச்சியெனும் சாமுண்டி
சடைச்சியே ஓடி வாடி
ஆஆஆஅரோகரா
பாலன் பொலம்பறது
அனைவரும் : பார்வதியே கேக்கலையா
பம்ப உடுக்கே தப்புதாரை
சத்தம் கேக்கலையா
அனைவரும் : வெல்லம் பட்டை சாராயம்
வேணமட்டும் வைக்கலையா
வெள்ளாடு எருமை கடா
வெட்டி பொங்கலிடலையா
முட்டை கரி மீனு
மோந்த கல்லு வைக்கலையா
முச்சந்தி வீதியிலே
மொறன்ஜோறு கொல்லையா
பொட்ட கோழியருது
பூசையிலே வெக்கலையா
பொன்னாலகு குத்தி பூவெடுத்து போடலையா
அனைவரும் : ஆயி மலைக்கன்னி தாயே
ஆயிமகமாயி
ஆயி மகமாயி தாயே
ஆயி மலைக்கன்னி
ஏஅருவாமனை வெட்டருவா
ஆணி சுத்தி அத்தனையும்
இரும்பாக்க வல்லவடா
எம்பேரு கன்னியடா
ஏபச்சக் கருவாட்டக்
கரும் பூனை மத்தியிலே
அச்சுக் கொலையாம
அப்படியே மூடி வைச்சா
காவல் காக்க வல்லவடா
காயாம் பூ மேனியடா
கோடி நிலா வரிக்கும்
கூடமுள்ள வீட்டிலம்மா
நாடிப்பித்த சேட்டை போல
நாயகியே நீயலைந்து
மெள்ளப் படுத்துப் பஞ்சு மெத்தையிலே
தூங்கும்போது
கோளாறு சொப்பனங்க
கொழப்பமாத் தோணுதம்மா
நடந்தது அத்தனையும்
நானறிவேன் தேவியரே
கடந்த விஷயமெல்லாம்
கச்சிதமாச் சொல்லி வாரேன்
அனைவரும் : உண்டுன்னா உண்டுன்னு
இல்லேன்னா இல்லேன்னு
அரண்மனை அந்தப்புரம்
ஆறுரெண்டு கல்லு தாண்டி
இருந்த இடத்தை விட்டு
எங்கோயில் நாடியல்லோ
முத்துப் பல்லக்கேறி மொய்க்குழலே
நீ வந்தாய்
அனைவரும் : உண்டுன்னா உண்டுன்னு
இல்லேன்னா இல்லேன்னு
ஒத்தையடிப் பாதையோரம்
ஒளிஞ்சிருந்த வீரரெல்லாம்
பல்லக்கைத் தானிருத்த
பாய்ந்து வந்தாரப்போது
உண்டுன்னா உண்டுன்னு
இல்லேன்னா இல்லேன்னு
ம்ம்
உருண்ட தலைகள்
ஒன்னு ரெண்டு மூணு
உண்டா சொல்லு
அட ஆமாம் போடு
ஆமாம்
மெரண்ட பசங்க
வெருண்டு ஓடினார்
உண்டா சொல்லு
அட ஆமாம் போடு ஆமாம்
அந்த நேரத்திலே
அங்கொருத்தன் வந்தான்
உண்டா சொல்லு
அட ஆமாம் போடு ஆமாம்
பந்து போல் குதித்து
வந்தவர் நடுங்க
பட்டாக் கத்தியை எடுத்தான்
ஆமாம் பட்டாக் கத்தியை எடுத்தான்
பம்பரம் போலே சுத்திச் சுழன்று
பகையை விரட்டியடித்தான்
ஆமாம் பகையை விரட்டியடித்தான்
வந்தனமய்யா வந்தனமய்யா
வந்தனமய்யா வந்தனம்
முந்தியறியா எங்களைக் காப்பாத்த
முன் வந்த வீரரே நீ யாரு
என்று நீ கேட்க வந்தவன் உன்னிடம்
இறந்த மனித ஆவியென்றே
சொன்னதும் உன் தலை சுத்தியே பல்லக்கில்
சோர்ந்து விழுந்தது மெய்யல்லவோ
உண்டுன்னா உண்டுன்னு
இல்லேன்னா இல்லேன்னு
ஆங்ஆவியென்று சொன்னதெல்லாம்
அத்தனையும் பொய்யம்மா
அத்தனையும் பொய்யம்மா
ஆளிருப்பது மெய்யம்மா
ஆளிருப்பது மெய்யம்மா
பாவிப்பய ஒருத்தனாலே
பரதேசியானாம்மா
பரதேசியானாம்மா
பயப்பட வேணாம்மாஆ
பயப்பட வேணாம்மா
ஆளும் பல வேடம் கட்டி
அலைஞ்சுமே வாராம்மா
அலைஞ்சுமே வாராம்மா
ஆணழகன் தானம்மா
மாலைப்பூ வாடு முன்னே
மலையேறப் போறேம்மா
மலையேறப் போறேம்மா
மனக் கவலை வேணாம்மா
மனக் கவலை வேணாம்மா
மனக் கவலை வேணாம்மா
உனக்கு மனக் கவலை வேணாம்மா