Malaril Madhu Edharkku

Malaril Madhu Edharkku Song Lyrics In English


மலரில் மது எதற்கு
மதுவில் சுவை எதற்கு
மனதில் ஆசை வளரும்போது
மனிதன் ரசிப்பதற்கு

மலரில் மது எதற்கு
மதுவில் சுவை எதற்கு
மனதில் ஆசை வளரும்போது
மனிதன் ரசிப்பதற்கு

கண்ணில் தோன்றும் இன்பம்
எல்லாம் நம் சொந்தம்
காலம் நேரம் பார்த்தால்
வருமோ ஆனந்தம்
பெண்ணைப் பாரு கவலைகள் மறையும்
பேசிப் பாரு புதுமைகள் தெரியும்
இன்ப நிலை காணவா கண்ணாளா

மலரில் மது எதற்கு
மதுவில் சுவை எதற்கு
மனதில் ஆசை வளரும்போது
மனிதன் ரசிப்பதற்கு
மலரில் மது எதற்கு


வளரும் உலகின் மேலே
வாழ்வது சிலநாளே
வருவதை அனுபவியாமல்
தீர்வது எதனாலே
தாகம் தீர்க்க கனிரசம் உண்டு
தனிமை நீக்க பூங்கொடி உண்டு
தேனமுது பருக வா கண்ணாளா

மலரில் மது எதற்கு
மதுவில் சுவை எதற்கு
மனதில் ஆசை வளரும்போது
மனிதன் ரசிப்பதற்கு
மலரில் மது எதற்கு