Malaril Madhu Edharkku |
---|
மலரில் மது எதற்கு
மதுவில் சுவை எதற்கு
மனதில் ஆசை வளரும்போது
மனிதன் ரசிப்பதற்கு
மலரில் மது எதற்கு
மதுவில் சுவை எதற்கு
மனதில் ஆசை வளரும்போது
மனிதன் ரசிப்பதற்கு
கண்ணில் தோன்றும் இன்பம்
எல்லாம் நம் சொந்தம்
காலம் நேரம் பார்த்தால்
வருமோ ஆனந்தம்
பெண்ணைப் பாரு கவலைகள் மறையும்
பேசிப் பாரு புதுமைகள் தெரியும்
இன்ப நிலை காணவா கண்ணாளா
மலரில் மது எதற்கு
மதுவில் சுவை எதற்கு
மனதில் ஆசை வளரும்போது
மனிதன் ரசிப்பதற்கு
மலரில் மது எதற்கு
வளரும் உலகின் மேலே
வாழ்வது சிலநாளே
வருவதை அனுபவியாமல்
தீர்வது எதனாலே
தாகம் தீர்க்க கனிரசம் உண்டு
தனிமை நீக்க பூங்கொடி உண்டு
தேனமுது பருக வா கண்ணாளா
மலரில் மது எதற்கு
மதுவில் சுவை எதற்கு
மனதில் ஆசை வளரும்போது
மனிதன் ரசிப்பதற்கு
மலரில் மது எதற்கு