Mannaiyum Ponnaiyum |
---|
மண்ணையும் பொன்னையும்
கொடுத்தவ யாரு
உன்னையும் என்னையும்
காப்பவ யாரு
அந்த ஆத்தவ தினம்
பாடுறது யாரு
பாமாலைக் கட்டிப்
போடுறது யாரு
ஊரெல்லாம் கொண்டாடும் ஆளு
அவன்தாண்டி இவனானு பாரு
மண்ணையும் பொன்னையும்
கொடுத்தவ யாரு
உன்னையும் என்னையும்
காப்பவ யாரு
சூடி கொடுத்த சுடர் கொடியே
எப்போதும் நான் உன் சொற்படியே
பாடிக் கொடுத்த புதுக் கவியே
என் வீடு நாளும் உன் மடியே
கொய்யாம காத்தாடும்
கொய்யாவைப் போலாடும்
மானே பனி பூந்தேனே
எந்நாளும் ராக்காலம்
நான் சூடும் பூக்கோலம்
கேட்கும் உன்னை எதிர் பார்க்கும்
வந்தேன் நான் எனை
தந்தேன் நான்
புதுச் செந்தேன் தான்
உனைச் சேராதோ
மண்ணையும் பொன்னையும்
கொடுத்தவ யாரு
உன்னையும் என்னையும்
காப்பவ யாரு
பூ வச்ச பொண்ணு
ஒண்ணு நெனச்சாலே
பூமிக்கு அச்சமின்றி
முடிப்பாளே
யாராச்சும் முன்னே
வந்து தடுத்தாலே
பூகம்பம் போலே
பொங்கி அழிப்பாளே
பூவைப்போல் பொண்ணிருப்பா
மதிச்சாலே
முள்ளைப்போல் மாறிடுவா
மொறைச்சாலே
கடலுக்கு கரையைக்
கட்ட பார்க்காதே
தறிக்கெட்டு தவறிக்
கெட்டு பேசாதே
மங்கம்மா ராணியைப்போல
எங்கம்மா பெத்துப் போட்டாளே
தெக்குசீமைப் பொண்ணு
அஞ்ச மாட்டா
கொம்புத்தேன் உனக்கெதுக்கு
கிட்டாது முடவனுக்கு
ஒத்துக்கொள்ளு ஒத்தி நில்லு மாமா
சொன்னா இவ செஞ்சி முடிப்பா
சொன்னா இவ செஞ்சி முடிப்பா