Mudhal Murai

Mudhal Murai Song Lyrics In English


இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஓஹோஓஓ
முதல் முறை மழை பார்க்கும்
பிள்ளையை போல் நானே
விழி விரிந்திட பார்த்தேனே
அவள் உலகத்தில் வீழ்ந்தேனே

இது வரை சுவை தீட்டும்
நொடிகளை தோற்றேனே
அவள் திருடிட பூத்தேனே
புது புலன்களை சேர்த்தேனே

கரை பட்ட ஓட்டை தொட்டி
தினம் பார்த்து தாண்டி சென்றேன்
அது வாசல் பூவை ஏந்தி
உயிர் தாங்க இன்றே கண்டேன்

மனதோடு நேசம் பேசும் கண்கள்
நமக்கென்றே நிற்கும் கால்கள்
நம் தோளை தட்டும் கைகள்

சின்ன சின்ன அர்த்தம் உண்டாக்கினாள்
இனி சுகம் மட்டும் என்றாக்கினாள்
நிழலுக்குள் சிற்பம் உண்டாக்கினாள்
நிஜம் இந்த கண்ணீர் என்றாக்கினாள்

ஏன் தோன்றினேன்
வாழ்கிறேன்
உணர்ந்து கொள்ள நேரம் இன்றி
ஓடினேன் ஓடோடினேன்
ஏன் என்னைமாற்றினாள்


என் கோபமும் காயமும்
தூர வீசி காயும் நெஞ்சில்
ஈரம் பூசி தூசி நீக்கி
தூய்மை ஆக்கினாள்

ஏன் வாழ்வில் ஓரமாய்
ஓயாத பேரலை
அணையாத காற்றிலே
அன்பின்று நேரலை

சின்ன சின்ன அர்த்தம் உண்டாக்கினாள்
இனி சுகம் மட்டும் என்றாக்கினாள்
நிழலுக்குள் சிற்பம் உண்டாக்கினாள்
நிஜம் இந்த கண்ணீர் என்றாக்கினாள்

முதல் முறை மழை பார்க்கும்
பிள்ளையை போல் நானே
விழி விரிந்திட பார்த்தேனே
அவள் உலகத்தில் வீழ்ந்தேனே

இது வரை சுவை தீட்டும்
நொடிகளை தோற்றேனே
அவள் திருடிட பூத்தேனே
புது புலன்களை சேர்த்தேனே
ஹே ஹே ஹே