Naadhar Mudi Melirukkum |
---|
நாதர் முடி மேலிருக்கும்
நல்ல பாம்பே
நாதர் முடி மேலிருக்கும்
நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார்
சொல்லு பாம்பே
நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார்
சொல்லு பாம்பே
ஆதி சிவன் தலை அமர்ந்த ஆணவமா
ஆதி சிவன் தலை அமர்ந்த ஆணவமா
அவன் அங்கம் எல்லாம் விளையாடும் தைரியமா
அவன் அங்கம் எல்லாம் விளையாடும் தைரியமா
நாதர் முடி மேலிருக்கும்
நல்ல பாம்பே
உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார்
சொல்லு பாம்பே
ஊர் கொடுத்த பால் குடித்து
உயிர் வளர்த்தாய்
பால் உண்ட சுவை மாறும் முன்னே
நன்றி மறந்தாய்
ஊர் கொடுத்த பால் குடித்து
உயிர் வளர்த்தாய்
பால் உண்ட சுவை மாறும் முன்னே
நன்றி மறந்தாய்
வஞ்சமற்ற தொண்டருக்கே
வஞ்சனை செய்தாய்
வஞ்சமற்ற தொண்டருக்கே
வஞ்சனை செய்தாய்
அவர் பிஞ்சு மகன் நெஞ்சினுக்கே
நஞ்சு கொடுத்தாய்
அவர் பிஞ்சு மகன் நெஞ்சினுக்கே
நஞ்சு கொடுத்தாய்
பெயருக்குத் தகுந்தார் போல்
மாறி விடு
எங்கள் பிள்ளையை மறுபடியும் வாழ விடு
பெயருக்குத் தகுந்தார் போல்
மாறி விடு
எங்கள் பிள்ளையை மறுபடியும் வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
நெஞ்சம் மாறி விடு பிள்ளையை வாழ விடு
சங்கமம் அன்றொரு முத்தமிழ் பாடிய
சங்கரன் மீதினில் ஆணை
சங்கப் புலவர்கள் நாவில் அடங்கிய
செந்தமிழ் மீதினில் ஆணை
மங்கலக் குங்குமம் மஞ்சள் நிறைந்த
சங்கரி மீதினில் ஆணை
மாதொரு பாகன் சூடிய நாகப் பாம்பே
உன் மேல் ஆணை
தேவன் மீதில் ஆணை
அவன் திருவடி மீதும் ஆணை
திருமறை மீதில் ஆணை
என் திருநாவின் மேல் ஆணை
பண் மேல் ஆணை சொல் மேல் ஆணை
என் மேல் ஆணை உன் மேல் ஆணை