Naan Aada Vandhean |
---|
நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில் கட்டி வைத்த சலங்கை இல்லை நான் பாட வந்தேன் என் பாட்டுக்கு என்ன ராகமின்னு விளங்கவில்லை
மனசுக்குள்ளே நெருஞ்சி முள்ளு எடுத்தெறிய இங்கு நேரமில்லை மனசுக்குள்ளே நெருஞ்சி முள்ளு எடுத்தெறிய இங்கு நேரமில்லை
நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில் கட்டி வைத்த சலங்கை இல்லை
அந்த ஆகாச பந்தலிலே மல்லிகைப்பூ அதை கொண்டாந்து மாலைக் கட்டும் என் நினைப்பு அந்த ஆகாச பந்தலிலே மல்லிகைப்பூ அதை கொண்டாந்து மாலைக் கட்டும் என் நினைப்பு
இப்ப என்னாச்சு தப்பு என்றாச்சு இப்ப காகிதப் பூவில வாசனை கண்டு கொண்டேன் இங்கே ஜவ்வாது வாசம் செல்லாது பாவம் சந்தன மாலையை சேத்துல வீசிவிட்டேன்
நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில் கட்டி வைத்த சலங்கை இல்லை
நெஞ்சில் கொள்ளாத ஆசைகளை கொண்டு வந்தேன் அது செல்லாத காசுன்னு நான் கண்டு கொண்டேன் நெஞ்சில் கொள்ளாத ஆசைகளை கொண்டு வந்தேன் அது செல்லாத காசுன்னு நான் கண்டு கொண்டேன்
இந்த ஏமாற்றம் நெஞ்சில் தீ மூட்டும் மான்கள் மாமிசம் தின்கிற காலமும் வந்ததம்மா வாழ்க்கை போராட்டம் துன்ப தேரோட்டம் இன்று அட்சய பாத்திரம் பிச்சைக்கு வந்ததம்மா
நான் ஆட வந்தேன் என் கால் இரண்டில் கட்டி வைத்த சலங்கை இல்லை நான் பாட வந்தேன் என் பாட்டுக்கு என்ன ராகமின்னு விளங்கவில்லை