Ore Oru Oorile |
---|
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஹ்ம்ம் ம்ம்ம்
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை
ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை
அந்த ஒன்பதிலே ஒன்றுக் கூட உருப்படி இல்லை
அந்த ஒன்பதிலே ஒன்றுக் கூட உருப்படி இல்லை
உருப்படி இல்லை
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
படிச்சிருந்தும் தந்தை தாயை
மதிக்க மறந்தான்
ஒருவன் படுக்கையிலே முள்ளை வைத்து
பார்த்து மகிழ்ந்தான்
படிச்சிருந்தும் தந்தை தாயை
மதிக்க மறந்தான்
ஒருவன் படுக்கையிலே முள்ளை வைத்து
பார்த்து மகிழ்ந்தான்
பிடிச்ச முயல் அத்தனைக்கும்
மூன்று கால் என்றான்
பிடிச்ச முயல் அத்தனைக்கும்
மூன்று கால் என்றான்
ஒருவன் பெண்டாட்டியின் கால்களுக்கு
காவல் இருந்தான்
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்
அதை பிள்ளைக்கு மேல் கண்களைப் போல்
காத்து வளத்தார்
பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார்
அதை பிள்ளைக்கு மேல் கண்களைப் போல்
காத்து வளத்தார்
உண்மை அன்பு சேவை என்ற
மூன்றும் கொடுத்தார்
உண்மை அன்பு சேவை என்ற
மூன்றும் கொடுத்தார்
அதன் உள்ளத்திலே வீடு கட்டி
தானும் இருந்தார்
அதன் உள்ளத்திலே வீடு கட்டி
தானும் இருந்தார்
தானும் இருந்தார்
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
சொந்தமென்று வந்ததெல்லாம்
சொந்தமும் இல்லை
ஒரு துணை இல்லாமல் வந்தததெல்லாம்
பாரமும் இல்லை
சொந்தமென்று வந்ததெல்லாம்
சொந்தமும் இல்லை
ஒரு துணை இல்லாமல் வந்தததெல்லாம்
பாரமும் இல்லை
நன்றி உள்ள உயிர்களெல்லாம்
பிள்ளை தானாடா
நன்றி உள்ள உயிர்களெல்லாம்
பிள்ளை தானாடா
தம்பி நன்றி கெட்ட மகனைவிட
நாய்கள் மேலடா
தம்பி நன்றி கெட்ட மகனைவிட
நாய்கள் மேலடா
நாய்கள் மேலடா
இருவர் : ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி
ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை
அந்த ஒன்பதிலே ஒன்றுக் கூட
உருப்படி இல்லை
உருப்படி இல்லை
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா