Pan Paadum

Pan Paadum Song Lyrics In English


பண்பாடும் பறவையே
என்ன தூக்கம்
பண்பாடும் பறவையே
என்ன தூக்கம்
உன் பழங்காலக் கதை இன்று
யாரைக் காக்கும்
தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா
நீ தாயற்ற கன்று போல் ஆகலாமா

பண்பாடும் பறவையே
என்ன தூக்கம்
உன் பழங்காலக் கதை இன்று
யாரைக் காக்கும்
தண்ணீரும் ரத்தமும் ஒன்றுதானா
நீ தாயற்ற கன்று போல் ஆகலாமா

பண்பாடும் பறவையே
என்ன தூக்கம்

ஆண்டாண்டு காலம் நாம் ஆண்ட நாடு
அன்னை தந்தை மக்கள் சுற்றம்
வாழ்ந்த நாடு
ஆண்டாண்டு காலம் நாம் ஆண்ட நாடு
அன்னை தந்தை மக்கள் சுற்றம்
வாழ்ந்த நாடு
தோன்றாமல் தோன்றும் வீரர் கொண்ட நாடு
தோன்றாமல் தோன்றும் வீரர் கொண்ட நாடு
தூங்கித் தூங்கி சோர்ந்து விட்டதிந்த நாடு

பண்பாடும் பறவையே
என்ன தூக்கம்


அடிமை வாழ்வுப் பாடம் இன்னும்
படிக்கலாமா
நல்ல அமுதம் என்று நஞ்சை அள்ளிக் குடிக்கலாமா
அடிமை வாழ்வுப் பாடம் இன்னும்
படிக்கலாமா
நல்ல அமுதம் என்று நஞ்சை அள்ளிக் குடிக்கலாமா
தன்னலத்தில் இன்பம் காண நினைக்கலாமா
தன்னலத்தில் இன்பம் காண நினைக்கலாமா
பெற்ற தாயிடத்தில் அன்பில்லாமல் இருக்கலாமா

பண்பாடும் பறவையே
என்ன தூக்கம்

பகுத்தறிந்து வாழ்பவரை
சரித்திரம் பேசும்
அவர் பரம்பரையின் கால்கள் மீதும்
மலர்களை வீசும்
பயந்து வரும் அடிமைகளைப்
பூனையும் ஏசும்
அவன் பால் குடித்த தாயைக் கூட
பேய் எனப் பேசும்

குடித்த பாலில் வீரம் கலந்து
கொடுத்தாள் உந்தன் அன்னை
குடித்த பிறகும் குருடாய் இருந்தால்
கோழை என்பாள் உன்னை
உரிமைக் குரலை உயர்த்தி இங்கே
விடுதலை காணத் துடித்து வா
உறங்கியதெல்லாம் போதும் போதும்
உடனே விழித்து எழுந்து வா
எழுந்து வாஎழுந்து வா