Punnai Vana Poonguyile |
---|
ஆஆஹ்ஆஹ்ஆஅ ஆஆஹ்ஆஹ்ஆஅஆஆ ஆஆஹ்ஆஹ்ஆ
புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா பூப் பூக்கும் பொழுதாச்சு பூ விழியும் பூத்தாச்சு அலைந்தாடுதே மனம் அலைந்தாடுதே கனவானதே பல கனவானதே
புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா
என்னோடு பேசும் இளம் தென்றல் கூட என் கேள்விக்கென்று பதில் கூறுது சொன்னாலே புரியும் உன் கண்ணின் மொழியும் முன்னாலே வந்து பதில் கூறு நீ
என் கண்கள் சொல்லும்ம்ம்ஹா என் கண்கள் சொல்லும் மொழி காதலே என்றென்றும் செல்லும் விலகாமலே தனியாக நின்றாலும் உன் தாகமே துணையாக வந்தாலும் தணியாதது
புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா
அகல் என்னும் தீபம் அணையாமல் வீசும் அழகாக ஆடும் மறுத்தென்ன பேசும் தூண்டாத விளக்கு நாம் கொண்ட காதல் ஏற்றாமல் ஒளியை எந்நாளும் வீசும்
அலை ஓய்ந்து போகும்ம்ம்ஹோய் அலை ஓய்ந்து போகும் கடல் மீதிலே நிலையான காதல் ஓயாதம்மா ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலுமே என்னோடு நீ தானே என் ஜீவனே
புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா பூப் பூக்கும் பொழுதாச்சு பூ விழியும் பூத்தாச்சு அலைந்தாடுதே மனம் அலைந்தாடுதே கனவானதே பல கனவானதே
புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வாஆ