Ranga Rattinam |
---|
ஹே ஏ ஏ ஹே ரங்கராட்டினம் போலே உன வட்டம் போடுதே காலு லட்சம் வானவில் நீ தான் என தத்தி தாவுறேன் மேலே
கண்ணே நீ ஒரு ராசாத்தி உன பாக்கும்போதே பசி தூக்கம் போச்சே கொஞ்சி நானுமே தாலாட்ட வெறும் நாளும் கூட திருநாளா ஆச்சே
அடியாத்தி உன் வார்த்த நிக்கும் நெஞ்சில் தேனாட்டம் துணையாக சேர்ந்தாலே புல்லும் ஆவேன் பூந்தோட்டம்
ஹே ரங்க ராட்டினம் போலே உன வட்டம் போடுதே காலு லட்சம் வானவில் நீ தான் என தத்தி தாவுறேன் மேலே
ஆயிரம் பெற பார்த்தாலும் ஆசை தான் உன் மேலே தாவணி போட்ட என் ராணி காட்டுற வாழ் நாள
காலுல கோலம் நீ போட பூமியே பூஞ்சோல சாடையா பேசும் உன் பேச்சு பீச்சுதே சீம்பால
தூங்குனா கூட மனசோட வீசுற தூரலா காதல தாண்டி எனக்கேதும் இல்லை வேலை
அடியாத்தி உன் வார்த்த நிக்கும் நெஞ்சில் தேனாட்டம் துணையாக சேர்ந்தாலே புல்லும் ஆவேன் பூந்தோட்டம்
ஹே ரங்க ராட்டினம் போலே உன வட்டம் போடுதே காலு லட்சம் வானவில் நீ தான் என தத்தி தாவுறேன் மேலே
கண்ணே நீ ஒரு ராசாத்தி உன பாக்கும் போதே பசி தூக்கம் போச்சே கொஞ்சி நானுமே தாலாட்ட வெறும் நாளும் கூட திருநாளா ஆச்சே