Soru Kondu Porapulla

Soru Kondu Porapulla Song Lyrics In English


சோறு கொண்டு
போறப்புள்ள அந்த சும்மாட
இறக்கு சோறு தண்ணி சாப்பிடுல
கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு

சோறு கொண்டு
போறப்புள்ள அந்த சும்மாட
இறக்கு

வேணாங்க வேணாங்க
இங்க வேணாம் வேணாங்க

ஆத்தங்கரை ஓரத்துல
ஒரு அத்தி மரம் இருக்கு அந்த
அத்திமர நிழலுல தான் சொத்து
சுகம் இருக்கு ஆத்தங்கரை ஓரத்துல
ஒரு அத்தி மரம் இருக்கு

சோலைக்குயில்
பாடுதம்மா சொந்தங்களை
சொல்லிச் சொல்லி வேலை
வந்து விரட்டுதம்மா இந்த
நெஞ்ச அள்ளி அள்ளி

சேலகட்டும் செவத்த
பொண்ணு சின்னப்பொண்ணு
செல்லக்கண்ணு மாலை போட
வேணுமுன்னு மாமன்கிட்ட
மயங்கும் நின்னு

சித்திரை முடிஞ்சதுன்னா
சேரும் அந்த வைகாசி அந்த
நேரம் தெரியுமடி மச்சானோட
கைராசி

காத்திருக்கேன்
ராப்பகலா எப்பவரும்
வைகாசி

சோறு கொண்டு
போறப்புள்ள அந்த சும்மாட
இறக்கு ஹையோ சோறு
தண்ணி சாப்பிடுல கொஞ்சம்
ஊட்டி விடு எனக்கு


சோறு கொண்டு
போறப்புள்ள அந்த சும்மாட
இறக்கு



ஆசைப்பட்டு நேசப்பட்டு
ஊர் முழுக்கப் பேசப்பட்டு
வாங்கித் தாரேன் கூரைப்பட்டு
வாடி புள்ள வாக்கப்பட்டு

கன்னிபொண்ணு
சின்னச்சிட்டு காத்திருக்கேன்
இஷ்டப்பட்டு என்னைத்தொட்டு
இழுத்துப்புட்டு இஷ்டம் போல
அள்ளிக்கட்டு

கிட்ட வந்து சிக்கிக்கிட்டு
தொட்ட போது வெட்கப்பட்டு
கட்டழக கட்டிக்கிட்டு கட்டிலிலே
மல்லுகட்டு

கூச்சப்பட்டு பூத்த
மொட்டு கும்புடுது
காலத்தொட்டு

சோறு கொண்டு
போறப்புள்ள அந்த சும்மாட
இறக்கு சோறு தண்ணி சாப்பிடுல
கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு

ஆத்தங்கரை ஓரத்துல
ஒரு அத்தி மரம் இருக்கு அந்த
அத்திமர நிழலுல தான் சொத்து
சுகம் இருக்கு ஆத்தங்கரை ஓரத்துல
ஒரு அத்தி மரம் இருக்கு