Thandaiyani Vendai |
---|
தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும் தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும் தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே நின் தந்தையினை முன் பரிந்து இன்பவுரி கொண்டு நன் சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போலே
கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும் கஞ்ச மலர் செங்கையும் சிந்து வேலும் கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும் கண் குளிர என்றன் முன் சந்தியாவோ
தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும் தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே
புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும் பொங்கி எழ வெங்களம் கொண்ட போது பொன் கிரி எனச் சிறந்து எங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூரக்
புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும் பொங்கி எழ வெங்களம் கொண்ட போது பொன் கிரி எனச் சிறந்து எங்கினும் வளர்ந்து முன் புண்டரிகர் தந்தையும் சிந்தை கூரக்
கொண்ட நடனம் பதம் செந்திலிலும் என்றன் முன் கொஞ்சி நடனம் கொளும் கந்தவேலே கொங்கை குற மங்கையின் சந்த மணம் உண்டிடும் கும்பமுனி கும்பிடும் தம்பிரானே!